கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் .
ஒருமுறை ஒரு சகோதரன் மூலமாய் வெளி நாட்டிற்குச் செல்ல வேண்டிய டிக்கெட்டை வாங்கும்படி எனது பாஸ்போர்டையும் கொடுத்து அனுப்பினேன். சிறிது நேரத்தில் என் சகோதரனின் மனைவியிடத்தில் இருந்து ஒரு செய்தி எனக்கு வந்தது. என்ன என்று கேட்டேன். உங்களுடைய பாஸ்போர்ட் சாலையிலே கிடந்தது என்று ஒருவர் கண்டெடுத்து பெயரைப் பார்த்து இங்கு என்னிடம் வந்து கொடுத்திருக்கிறார். யாரையாவது அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என்றான். பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பிய சகோதரர் சிறிது நேரத்தில் கலங்கிய உள்ளத்தோடு வந்தார். என் கையிலே அந்த பாஸ்போர்டைக் கண்டவுடன் அவர் ஆறுதல் அடைந்து எங்கோ விழுந்து விட்டது என்று கூறினார். கர்த்தர் அந்த பாஸ்போர்ட்டை சேதமின்றி பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்தார்.
அருமையான சகோதரனே, சகோதரியே வாழ்க்கையிலே அறியாது இழந்து போய்விட்டேன் என்று எதைக்குறித்தும் கலங்க வேண்டாம். நீங்கள் ஒருவேளை வீட்டின் பத்திரத்தை தொலைத்திருக்கலாம். அல்லது நீங்கள் படித்த சர்ட்டிபிகேட்டை தொலைத்திருக்கலாம். ஆனால் இன்று கலங்காது கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. C. எபனேசர் பால்