கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நல் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.
கடந்த மாதம் 18ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதிகளில் ஊழியம் செய்துக் கொண்டிருந்தோம். அந்நாளில் யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு இடத்திலே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவை அறியாத அநேகர் பங்கு பெற்றனர். கூட்ட முடிவிலே தனித்தனியாக ஒவ்வொருவருக்காக ஜெபிக்கப்பட்டது. அவ்வேளையில் ஒரு வயதான சகோதரர் மிகுதியான இருமலோடு ஜெபிக்க வந்தார்.ஜெப நேரத்தில் அதிகமாக பிசாசு அவரை பாதித்தது. அவரை அலைக்கழித்தது. ஓய்வில்லாதபடி இருமிக் கொண்டிருந்தார். தீங்கின் ஆவிகள் அவரை விட்டு நீங்கினவுடன் அவரிடத்திலிருந்து அந்த இருமலானது, ஒரு விளக்கை அணைத்த பின்பு,எப்படி விளக்கு அணைக்கிறதோ அவ்வாறு முற்றிலுமாய் நீங்கிற்று.
இதை வாசிக்கும் அருமையான சகோதரரே, சகோதரியே உங்கள் வாழ்க்கையில் சரீரத்தில் பாடுகளை பெருகச் செய்து கொண்டிருக்கிற பொல்லாத ஆவிகள் உங்களை விட்டு விலகும்போது, நீங்கள் சுகமும், ஆரோக்கியமும் அடைந்து ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
இன்று கர்த்தரை தேடுங்கள், அவரை நம்புங்கள், அவர் அதிசயம் செய்வார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ.சி.எபினேசர் பால்.