"நான் உனக்கு முன்னே போய் , கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். "    ஏசாயா 45:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

                     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

                     ஒரு அருமையான சகோதரன் தனது மறைந்து போன தகப்பனாரின் ஊர் சென்று , ஒரு வீட்டைக் கட்ட விரும்பினார். தன்  தாயுடன் அங்கு வாழ விரும்பினார். தன்  மறைந்த தகப்பனார் ஊர் சென்ற அந்த வாலிப சகோதரர் தான் படித்த B.E. படிப்பையும் , முடிக்காத நிலை , தோல்வியடைந்த பாடத்தின்  தேர்வுகளையும் எழுதியிருந்தார். அந்த ஊரில் வீடு கட்ட  ஒரு இடம்  வாங்க வகை கிடைத்தது. தாயின் கையில் இருந்த பணத்தைக் கொண்டு அந்த இடத்தையும் வாங்கினார். வீடு கட்ட  பிளான் அப்ரூவலுக்காக நகராட்சியிடம் மனு செய்தார். ஆனால்  வீடு கட்ட   திட்டமிட்ட இடத்திற்கு இன்னும் அப்ரூவல்  ஆகவில்லை என்று அதற்குரிய ஆபிசர் கூறிவிட்டார்.  கட்சியினர் மூலம் , அதிகாரிகள் மூலம் எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லாமல் போய்விட்டது . இந்நிலையில் என்ன செய்வது என்ற வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு சில ஆண்டுகள்  கழித்து  காலை ஆராதனைக்குச் சென்ற போது , அம்மாத வாக்குத்தத்தமாக ' கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் ' என்று போதகர் கூறின போது , இந்த சகோதரனுக்கும் தன்  காரியங்கள் எவ்வாறு செவ்வையாக்கப்படும் , வீடும்  கட்ட முடியாத நிலை, Exam எழுதியும் மீண்டும் தோல்வியடைந்த நிலை. இனி Exam  எழுத முடியாத நிலை வந்து விட்டதே என்று எண்ணினார். ஆனால்  அந்த மாதத்தின்  கடைசி நாளிலே அந்த வீட்டைக் கட்ட முன்வந்த என்ஜீனியரும் , நகராட்சி  அலுவலரும் அவர்கள் இருந்த வீட்டிற்கு வந்து வீடு கட்ட வேண்டிய அப்ரூவல் ஆன  திட்டத்தை (Plan)  கொடுத்துச் சென்றார்களாம்.

             அருமையான சகோதரனே , சகோதரியே , உன் வாழ்வில் பல காரணங்களினால் தடையான திருமணம், படிப்பு , வேலை, வீடு கட்டுதல்  , transfer, promotion - இதில் உள்ள எல்லாக் காரியத்திலும் , கோணல்படுத்துகிற சகல காரியங்களையும் கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து தம்முடைய மாறாத  வல்லமையான வார்த்தையின்படியே செவ்வையாக்கி , அதிசயம் காணச்  செய்வார், கலங்க வேண்டாம். அவரின் வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமென் என்று இருக்கிறது.

                                   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                    சகோ.சி.எபனேசர் பால்