சிந்தி செயல்பாடு

 

"அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்;அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை."

சங்கீதம் 34:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு சகோதரனுக்கு இரயில்வேயில் வேலை கிடைத்தது. இன்ஜினியராக பணியாற்ற ஆரம்பித்தார். திருமணமும் ஒழுங்கானது. இந்த நேரத்தில் அவர் பொறுப்பிலிருந்த அதிக விலையுயர்ந்த இரண்டு முக்கியமான மின்சாரக் கம்பங்கள் காணாமல் போய்விட்டன. எவ்வளவோ தேடியும் கிடைக்க வில்லை. ஒவ்வொரு கம்பமும் அதிக எடையுள்ளது. அக்கம்பங்கள் கிடைக்க வில்லையானால், அதற்குரிய தொகையானது அச்சகோதரனுடைய சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்படும். மிகுந்த கவலையுடன் ஜெபிக்க வந்தார். சில மனிதர்கள் மூலமாக தந்திரமான முறையில் இக்காரியம் செய்யப்பட்டுள்ளது. புகார் செய்தாலும் எந்தப் பதிலும் இல்லை. எனவே ஜெபிப்போம் என்று அச்சகோதரருக்குச் சொல்லப்பட்டது.

JCB மூலம் தேடியபோது, தரைக்கு அடியில் 1/2 மட்டம் ஆழத்தில் மண்ணில் தோண்டி புதைக்கப்பட்ட ஒரு கம்பம் கிடைத்தது. இதைக் கூறும்படி வந்த சகோதரன் அடுத்த கம்பம் கிடைக்கும்படி ஜெபிக்கச் சொன்னார். அந்தக் கம்பமும் கிடைத்துவிடும் என்ற வார்த்தையைக் கொண்டு கர்த்தர் அவரைத் தேற்றினார். அவ்வாறே ஜெபத்துடன் தேடியபோது, சில தினங்களிலேயே கிடைக்கும்படி கர்த்தர் கிருபை செய்தார்.

அன்பான சகோதரனே/சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையிலும் பொருளாக இருக்கலாம் அல்லது சமாதானம், சந்தோஷமாக  இருக்கலாம். அல்லது வேலையை இழந்திருக்கலாம். அது எதுவானாலும், முழு மனதோடு கர்த்தரைத் தேடி அவர் சமுகத்தில் விண்ணப்பிக்கும் போது, அதிசயத்தைச் செய்து, இழந்த எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள செய்வார். கலங்க வேண்டாம்; சோர்ந்து போகவும் வேண்டாம். அவர் உங்களை அதிசயங்களைக் காணச் செய்வார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C . எபனேசர் பால்.