சிந்தி செயல்படு

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்." சங்கீதம் 37:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆலயத்தின் கடைசி நாள் கூட்டத்தில் என்னுடைய ஊழியத் திட்டத்தைக் கூறி ஜெபித்துக் கொள்ள கேட்டுக் கொண்டேன். அந்த ஊழியத் திட்டத்தில் U.S.ம் Canada பகுதி ஊழியத்தையும் கூறியிருந்தேன். ஒரு சகோதரி தன் மகளைக்காண U.S. செல்ல இருந்தார்கள். அவர்கள் நான் முதன் முறையாக U.S. போகிறேன். இவர் எனக்கு உதவிச் செய்ய நான் செல்லுகிற விமானத்தில் வந்தால் நலம் என்று உள்ளத்தில் எண்ணி ஜெபித்தார்களாம். அவர்கள் பெங்களூரில் இருந்தாலும், சென்னை வந்து தான் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள். கர்த்தர் அவர்கள் இருதயத்தின் வேண்டுதலை அருள் செய்தார். அவர்களை ஏற்றிவிட வந்த சகோதரர் என் வயது சென்ற தாயும் இந்த விமானப்பயணத்தில் வருகிறார்கள். அவர்களுக்கு உதவி தேவை என்றார்கள். அந்தப்படி லண்டன் விமான நிலையத்தில் விமானம் மாறிச் செல்ல இருந்தார்கள். அவர்களை, அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்றிவிட கர்த்தரும் கிருபை புரிந்தார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவர். நம் தேவைகளை அறிந்தவர். நமக்குத் துணை புரிந்து பயத்தை நீக்கிப் பரிபூரண ஆசீர்வாதமும் அதிசயமும் செய்வார். இன்று முதல் கர்த்தரிடம் மன மகிழ்ச்சியாயிரு. அவர் அதிசயங்களைச்  செய்வார். இன்று முதல் இவ்விதமாக வாழ இடம் கொடுங்கள். கர்த்தர் உங்கள் விருப்பத்தை, வாஞ்சையை நிறைவேற்றுவார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

சகோ.C. எபனேசர் பால்.