சிந்தி செயல்படு

"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?"

எரேமியா 32:27

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ஒருமுறை என் உள்ளத்தில் எலும்புகள் உடைந்தால் எப்படி சுகமாகும், அதற்கு வைத்தியரை அணுகி கட்டுக்கட்ட வேண்டும் என்று எண்ணினேன். அன்று இந்த வேதப்பகுதியைத் தியானித்தப்போது, என் உள்ளத்தில் அவ்விதமான அற்புதத்தை காண விரும்பினேன். அடுத்த நாள் காலையில் ஒரு மருத்துவர் தனது மூன்று வயது மகளின் கை உடைந்து விட்டது, எலும்பு வைத்தியரிடம் சென்று மாவு கட்டுப் போடவேண்டும் என்று ஜெபிக்கக் கொண்டு வந்தார்கள். ஜெபவேளை முடிந்தது. அந்தப் பிள்ளையின் restlessness மாறினதால், பிறகு எலும்பு வைத்தியரிடம் போகலாம் என போய்விட்டார்கள். சில மணிநேரம் கழித்து கேட்டபொழுது, அந்தக் கையை வைத்து நன்றாக விளையாடுகிறாள், மாவு கட்டுத் தேவை இல்லை என்று கூறினார்கள்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, நமது நோய்களை எல்லாம் சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டபடியால், எந்த எலும்பு அல்லது மிக வேதனையான நோயாக இருந்தாலும், நமது விசுவாசத்தின் படி சுகமாக்க வல்லவராக இருக்கிறார். உங்களில் உள்ள பலவீனங்களை எண்ணாது, நமது நோய்களைச் சுமந்து தீர்த்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போம். அதிசயமடைவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.