செய்தி

"... ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;

 பழையவைகள் ஒழிந்துபோயினஎல்லாம் புதிதாயின."    

கொரிந்தியர் 5:17

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன். புத்தாண்டின் வாழ்த்துதலை தெரிவிக்கிறேன். கர்த்தர் தாமே இந்த ஆண்டினை மிகுந்த ஆசீர்வாதத்தினால் நிறைப்பாராக.

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்றாலே நன்மைகள் நிறைந்த நல்வாழ்வாகும். கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை எல்லா நிலைகளிலும் நாம் சமாதானமும், சந்தோஷமும் பெற்ற வாழ்வாகும். கிறிஸ்து இல்லாத வாழ்வுக்கும் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கைக்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. என்னுடைய வாழ்வில் கிறிஸ்துவைக்குறித்து தெரிந்திருந்தேன். அவரே ஜீவனுள்ள தேவன். அவரே பெரியவர், புகழப்படத்தக்கவர், அவரே மகிமைக்குப் பாத்திரர். அவரே ஆராதனைக்குரியவர் என்றதால் ஞாயிறுதோறும் ஆலய ஆராதனையில் பங்கு பெற்றேன். பாடகர் குழுவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு பெற்றேன். ஆலயத்தின் எல்லாக் காரியங்களிலும் பங்கு பெற்றேன். அந்நாட்களில் என்னுடைய Diocese Bishop அவர்கள் என்னை ஆலய பரிபாலன சங்கத்தில் அங்கத்தினராக பரிந்துரைத்து பங்கு பெறச் செய்தார்கள். ஆனால் நானோ கிறிஸ்துவுக்குள் இல்லை. கிறிஸ்தவன் என்ற பெயருடைய வகையில் வாழ்ந்தேன். உலகப்பிரகாரமாக எல்லா வீணான சண்டையிலும், சச்சரவிலும், தலையிட்டதுண்டு. பாரம்பரிய பழக்கமுடையவனாக சத்தியத்தை அறியாதவனாக வைராக்கியத்துடன் வாழ்ந்து வந்தேன். வாழ்வில் பல பொய்யான காரணத்தைக் கூறி கடன்காரனாக வாழ்ந்தேன். என் இஷ்டம் போல் என் நேரத்தை, பணத்தை செலவிட்டேன். விளையாட்டு போட்டி என்றால் முழுமையாக பங்கு பெறுவேன். உலக மனிதனாய் இருந்தபடியால்  சீட்டு, சதுரங்கம் கேரம் போர்டு இவைகளை விளையாடுவதுடன், மற்ற என் போன்ற கிறிஸ்தவர்களையும் அழைத்து விளையாட்டில் பங்கு பெறச்செய்தேன். இது ஒன்றும் தவறு இல்லை. குடித்து வெறித்து வாழ்கிற வாழ்வு தான் தவறு என்ற எண்ணமுடையவனாக எல்லாத் தவறான விதத்திலும் வாழ்க்கையை நடத்தி வந்தேன். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்றால் முற்றிலும் முந்தின வாழ்க்கைக்கு மாறான செய்கைகளும், பண்புகளுடைய வாழ்வு. பழைய வாழ்வில் ஏதாவது சிறிய காரியமானாலும் சண்டையிடுவது, தர்க்கம் பண்ணுவது, சரியில்லை என்றாலும் சரி என்று வீணாய்த் தர்க்கம் செய்கிற வாழ்வாக இருந்தது. ஆனால் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு வேறுபட்டது. முற்றிலும் பழைய வாழ்வு, செய்கைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வாகும்.

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எப்படியிருக்கும்?

1.ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளும் வாழ்வு

"...உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோஅத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே." கலாத்தியர் 3:27 

            இன்று கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு என்றாலே கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட வாழ்வாகும். இந்தப் பாக்கியத்தை யார் பெறுவார்கள் என்றால், விசுவாசமுள்ளவர்களாகி மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்களாகும். இந்த வாழ்வு கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வின் ஆரம்பமாகும். இந்த வாழ்வில் கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பார்க்க முடியும். சிலர் நான் ஆலயம் செல்கிறேன். அவரையே ஆராதிக்கிறேன். இயேசு கிறிஸ்து எனக்கு என்ன செய்திருக்கிறார்? மகன் வேறுவிதமாய் நடக்கிறான், மகளின் திருமண வாழ்வு தடையாக இருக்கிறது. தங்கி தாபரிக்க வீடு இல்லை. என்னைப்போல பதவியில் இருந்தவர்கள் மூன்று நான்கு வீட்டுக்கு சொந்தக்காரராயிருக்கிறார்கள். எனக்கோ நல்ல வாகனம் கிடையாது. அவர்களுக்கோ நல்ல வாகனம் உள்ளது என்று குறைகளைக் கூறி கவலைப்படுகிறார்கள். அன்பின் தேவப்பிள்ளையே, கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட வாழ்வில் உண்டாகும் சமாதானம், சந்தோஷம் சகல விதங்களிலும் நம் உள்ளத்தை திருப்தியாக்கி கர்த்தரின் ஜீவ வசனத்தினால் மிகுந்த ஆசீர்வாதத்தை உண்டாக்கிவிடும். முன்பு இருந்த பகை, கோபம் மற்ற எல்லா வேதனைகளும் நம்மை விட்டு நீங்கி, நன்மை செய்கிற மக்களாக நம்மை மாற்றிவிடும். அவர்களுடைய உள்ளம் எதினாலும், எக்காரணங்களினாலும் கலங்காது, கவலைக்கொள்ளாது இருப்பதையே காணமுடியும்.

2) கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

"நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்ஆபகூக் 3:18

இன்று மகிழ்ச்சியாயிருக்கும் வாழ்வு மிகவும் அவசியமாய் இருக்கிறது. இது சரீரத்திற்கும், நம் மனதிற்கும் வேண்டியதாய் இருக்கிறது. 'மன மகிழ்ச்சி முகமலர் முகமலர்சியைத் தரும், மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்' என்று நீதி. 15:13 ல் பார்க்கிறோம். இன்று மனநோய் வருவதற்கு மனதுக்கும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆவியின் முறிவு ஒரு போராட்டமான வாழ்வை உருவாக்கி விடுகிறது. ஆனால் மனமகிழ்ச்சி நல்ல மருந்தாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் குறைவுகளினால் மகிழ்ச்சி குறையாது. எந்தக் குறைவு உண்டானாலும் மகிழ்ச்சியாயிருக்கும் வாழ்வுதான் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வாகும். தேவ பிரசன்னத்தில் உண்டாகும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் ஒருபோதும் குறைவுப்படாததும், மாறாததாயும் இருக்கிறது. அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வாழ்வு எந்த தோல்வியினாலும் ஏமாற்றத்தினாலும் கலங்காது இருக்க கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு வாழ இடங்கொடுங்கள். மகிழ்ச்சியானது நம் சுக வாழ்விற்கு மிக அவசியமாயிருக்கிறது. இந்த மகிழ்ச்சி உன் நற்பண்புகளை வெளிப்படுத்தும். இவ்வுலக வாழ்வில் சகல சூழ்நிலைகளிலும் தைரியமாய் வாழ உன்னைப் பெலப்படுத்தும். தவறான தீர்மானங்களைத் தவிர்க்கும், நலமான சிந்தையுடன் உங்களைச் செயல்படச் செய்யும். கர்த்தருக்குள்ளான வாழ்வு மெய்யான மகிழ்ச்சியை உண்டாக்கும்.

3) கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு வெற்றியை உண்டாக்கும்

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணிஎல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." 2 கொரிந்தியர் 2:14

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு நமக்குள் வெற்றியை உண்டாக்குகிறது. பல விதங்களில் இன்று நமக்கு வெற்றி அதிகம் தேவை. இந்த வெற்றியில்லாததினால் தவறான தீர்மானங்கள் செய்து மிகுந்த துக்கத்துடன் வாழும் மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். எனக்கு வெற்றியே ஒன்றிலும் கிடையாதா என்று கலங்கி தவிக்கும், தடுமாறும் மக்கள் ஏராளமாய் உண்டு. சிலர் வெற்றியில்லாமையினால் நான் ஏன் வாழ வேண்டும் என்று மிகுந்த துக்கத்துடன் தவறான முடிவை எடுக்கிறார்கள். இன்று நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. 'குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி 21:31). நாம் செய்கிற சிறிய பெரிய எல்லா காரியங்களிலும் நமக்கு ஜெயன்கொடுக்கிறவர் கர்த்தரே. நம் எல்லா காரியங்களையும் வாய்க்கச்செய்வார். 'மரணத்தை ஜெயமாக விழுங்குவார்' என்று ஏசாயா 25:8 சொன்னது போல, அவரே நமக்கு நம் வியாதியில், நம் தொழிலில், நம் வியாபாரத்தில், நாம் வளர்க்கும் மிருக ஜீவன் காரியங்களில் ஜெயம் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். ரோமர் 8:37ல் 'இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே' என்ற வசனத்தின்படி, கிறிஸ்துவின் அன்புக்கு பாத்திரராகும்படி நம் வாழ்வை செவ்வைய்ப்படுத்தி, அவருக்குள் வாழ இடம்கொடுக்கும் போது முற்றும் ஜெயங்கொள்கிற மக்களாக இருக்கிறோம். அன்பு சகோதரனே / சகோதரியே, இன்று வாழ்வு தோல்வியடைந்ததாய் இருக்கிறது என்று ஏங்கும் தேவப்பிள்ளையே, உன்னை வெற்றியினால் அலங்கரிக்கும் ஆசீர்வதிக்கும் தேவன் ஜீவிக்கிறார். அவருக்குள் வாழ இன்று இடம் கொடு. வெற்றியால் உன்னை முடிசூட்டுவார். உன் குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாக மாறும். உன் பிள்ளைகள் வெற்றியினால் மேன்மையடையவர்கள்.

4) கர்த்தருக்குள் மேன்மை பாராட்டுவார்கள்

"இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்." ஏசாயா 45:25

கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையில் மேன்மை உண்டாகும். இது இஸ்ரவேலின் சந்ததிக்குரிய ஆசீர்வாதமாக சொல்லப்பட்டு இருக்கிறது. யார் இஸ்ரவேலர்? இன்றுள்ள இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்தவர்களல்ல. மனமாற்றம் அடைந்த மனிதனை இஸ்ரவேல் என்று வேதம் கூறுகிறது. இவ்வுலகில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் யாக்கோபைப் போல் பலவிதமான தவறான பண்புகளுடைய உலக மனிதர்கள் ஆவார்கள். இந்த யாக்கோபு சகோதர பாசம் இல்லாதவன், கண் தெரியாத தகப்பனை, தான் ஏசா என்று சொல்லி ஏமாற்றியவன். இவனைத் தான் இஸ்ரவேலாக கர்த்தர் உருவாக்கினார். இந்த மாற்றப்பட்ட வாழ்வில் கர்த்தருக்குள் வாழும் ஒவ்வொரு மனிதனும் நீதி செய்கிறவர்களாக மாற்றப்பட்டு, மேன்மை நிறைந்து வாழும் பாக்கியம் அடைவார்கள். இன்று வாழ்வில் அற்பமாக எண்ணப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஒருவருமே நம்மை பொருட்டாக எண்ணாத துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்வு என்று உள்ளம் உடைந்து துக்கித்துக் கொண்டு இருக்கலாம். என்றைக்கு நாம் கர்த்தருக்குள் வாழ நம்மை ஒப்புக்கொடுக்கிறோமோ, அன்று முதல் நம்முடைய நீதியினால் அல்ல அவரின் அளவற்ற இரக்கத்தினால் மேன்மையும் மகிழ்ச்சியும் அடைவோம். என்றைக்கு என்னை கர்த்தருக்குள் வாழ ஒப்புக்கொடுத்தேனோ அன்று முதல் அவர் என்னை நடத்த ஆரம்பித்தார். பொய் சொல்லி கடன் வாங்குவதை நிறுத்தினேன். கொஞ்ச காலத்தில் கடன் தொல்லை நீங்கிற்று. அதிக வருமானம் என்றல்ல, உள்ளதை ஆசீர்வதித்தார். அது பெருகியது. ஐந்து அப்பமும் இரண்டு மீனும் ஆசீர்வதிக்கப்பட்டபோது, ஐயாயிரம் பேர் சாப்பிட்டு 12 கூடைகள் மீதியாக சேர்க்கப்பட்டது போல, என் வாழ்க்கை மாறியது. கர்த்தருக்குள் வாழ ஆரம்பித்த புதிய வாழ்வில், இயேசு கிறிஸ்துவின் அன்பையும், வல்லமையையும் குறித்து பேச ஆரம்பித்தேன். அநேகர் என்னைத் தேடி வர ஆரம்பித்தனர். அற்புதத்தின் மேல் அற்புதங்களைக் காண கர்த்தர் கிருபை செய்தார். கடனில்லா வாழ்வு வாழவும், அங்கும் இங்கும் சென்று கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொடுக்கவும் கர்த்தர் உதவிச் செய்தார். கிறிஸ்துவுக்குள் வாழ ஒப்புக் கொடுத்தவுடன், அதிசயங்களையும், ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க கர்த்தர் கிருபை புரிந்தார். நீதிமான்களின் ஜெபங்களைக் கேட்கிற தேவன், மேன்மையடைய வழி திறப்பார். கிறிஸ்துவுக்குள் நம் வாழ்வு மாறும்போது, மகிழ்ச்சியும்,  வெற்றியும், மேன்மையும் அடைவோம். இழந்து போன சுகம், சமாதானம், சந்தோஷம் சர்வத்தையும் சம்பூரணமாய் பெற்று வாழ்வோம். இந்த கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை வாழ நம்மை அற்பணிக்கும்போது, சில சிறந்த மாற்றங்கள், நம் சரீரத்திலும், உள்ளத்திலும், ஆவியிலும் நிறைவாக நடைபெறும். இதினால் ஆழமான கிறிஸ்துவின் அன்பில் வளரம் வளரவும், ஊழியத்தில் நிறைவாய் பங்கு பெறவும் நம் மனம் வாஞ்சையினால் நிறைந்து விடும். அதோடு ஊழியங்களைச் செய்ய நம் உள்ளத்தில் ஆவியின் வரங்களும் அருளப்பட்டு விடும். இந்தப் புதிய மாற்றம், ஊழியத்தின் பாதையில் புதிய தொடர்புகளையும் உண்டாக்கிவிடும். இந்தப் புதிதாகின்ற காரியங்கள் நம் வாழ்வில் உண்டாகும்போது, பழையவைகள் ஒழிந்துவிடும். மனிதனின் வாழ்வில் உள்ள பழையவைகள் என்ன என்று நாம் அறிய வேண்டும். பழைய வாழ்வில் தேவனுக்குப் பிரியமில்லாத பல தீய பண்புகள் நமக்குள் இருந்து அதையே பின்பற்றி வாழ்க்கை வாழ்ந்தோம். அது தவறு அல்லது தீமையானது என்று உணராது விட்டோம். இந்தப் புதிய மாற்றம், புதிய திருப்பம் பழைய வாழ்க்கையில், நாம் அறியாது, புரியாது செய்தவைகளை விட்டு உடனே விலகி, கர்த்தரின் வழியில் நடக்க ஆரம்பித்து விடுவோம். நம் வாழ்வில், நம் செயலில், சிந்தையில், உணர்வில், எண்ணத்தில் முன் செய்த காரியங்களினால் மனஸ்தாபப்படும் உள்ளம் நமக்கு உருவாகிவிடும்.

பழையவைகள் என்ன?

1. பொய் பேசுவது

"ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு," கொலோசெயர் 3:9

பொய் பேசுகிற காரியத்தை எங்கும் எளிதாய்க் காணமுடிகிறது. வியாபாரத்தில் ஒரு பங்கு தான். திருமண காரியங்களில் உண்மை பேசுவது இல்லை. பொய்யானவைகளைக் கூறி நல்லவன் என்று குடிகாரனை, மற்றவனிடம்/ மற்றவளிடம் பழகிவருகிற மாப்பிள்ளையை, பெண்ணைப் பற்றி தகவல் கொடுக்கிறவர்கள் ஏராளம். திருமணத்திற்கு பின்பு எல்லாம் சரியாகிவிடும் என்று பொய் பேசுகிறவர்கள் ஏராளம். தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள் (சங்கீதம் 58:3). அவரவர்கள் தங்கள் தோழரோடு பொய் பேசுகிறார்கள். பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவறுப்பானவைகள். 'நீ பொய் சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும் உன் மனதிலே வைக்காமலும் பேசுகிறாய்' என்று ஏசாயா 57:11ல் பார்க்கிறோம். தன் பொய்யான வார்த்தைகளினால் உண்மையான தீர்க்கதரிசி தன் ஜீவனை இழந்தான். இதனை 1 இராஜா. 13: 18 - 24 வசனங்களில் பார்க்க முடிகிறது. பொய்யாணை, பொய் சாட்சி சொல்லுகிற மக்கள் ஏராளம். சிறு பிராயத்தில் இருந்தே இந்த பொய் சொல்லும் பழக்கம் ஆரம்பமாகி விடுகிறது. ஒருமுறை வகுப்பில் ஆசிரியை மிருகங்களைப் பற்றி போதிக்கும் போது, யாரெல்லாம் யானையைப் பார்த்திருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டார்களாம். உடனே ஒரு மாணவன் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினானாம். எங்கு பார்த்திருக்கிறாய் என்று ஆசிரியைக் கேட்க, என் தகப்பனார் ஒரு யானையை வளர்த்தார்கள் என்று கூறினானாம். அந்த ஆசிரியை நாம் இந்த மாணவன் வீட்டுக்குச் சென்று யானையைப் பார்க்கலாம் என்று சொன்னவுடன், அந்த மாணவன் அந்த யானையை நேற்றுதான் என் வீட்டில் சமைத்து விட்டார்கள் என்று கூறினானாம். ஆம் பொய்யின் ஆவியில் தந்திரமான செயலானது உலகமெங்கும் நிறைந்திருக்கிறது.  பொய்யான காரியங்களைக் கூறி பெண்களை ஏமாற்றுகிற மக்கள் அதிகம் உண்டு. பொய்க்கு பிதாவாகிய பிசாசானவன் ஏவாளிடம் பொய்யானவைகளைக் கூறி, புசிக்க வேண்டாம் என்ற பழத்தை புசிக்கும்படி ஏவாள் உள்ளத்தில் தூண்டினான். இன்று உண்மையை விரும்புகிற தேவனுக்குப் பிரியமில்லாத பொய்யை வெறுக்க வேண்டும்.

2. பழைய மனிதனின் இச்சைகள்

"அந்தப்படிமுந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டுஎபேசியர் 4:22

இன்று இச்சையானது மனிதனின் வாழ்வை கர்த்தரை விட்டு பிரியச் செய்கிறது. இச்சையானது உலகில் உண்டானது. இந்த இச்சையானது நம் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிறது. அவனவன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். இச்சையானது அழிவைத் தரும். ஆகான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்று கூறினான். எரிகோவின் பொருட்கள் சாபகரமானது என்று தெரிவிக்கப்பட்ட வார்த்தையை அசட்டை பண்ணி, பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு, இச்சித்து எடுத்து தன் கூடாரத்தில் புதைத்து வைத்தான். இதின் விளைவு தோல்வி, துக்கம். ஆனால் அவனில் இந்த பொய்யான செயல், அவன் சந்ததியே அழியக் காரணமாயிற்று. இதைப் போல பண ஆசை உடையவர்கள் பலவிதமான இச்சைகளில் விழுகிறார்கள். பழைய மனிதனின் இந்த தவறான செயலை நாம் வெறுக்க வேண்டும். தாவீது கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்தான். ஸ்நானம் பண்ணுகிற பெண்ணைப் பார்த்தான். அதினால் தவறான காரியத்தைச் செய்தான். சாபமும் மரணமும் உண்டானது. அன்பு தேவப்பிள்ளயே, விரும்பாத இச்சையை விட்டு விலகுவோமாக. இந்த ஆசை இச்சைகளை சிலுவையில் அறைவோமாக.

3. பழைய புளித்த மாவு

"ஆகையால்நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியேபுதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்குபழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்..." 1கொரிந்தியர் 5:7

பழைய புளித்த மாவு என்றால் நம் வாழ்வில் உள்ள துர்க்குணம், பொல்லாப்பு என்னும் பண்புகளாகும். இந்தக் கொஞ்சம் புளித்த மாவு புதிதாய்ப் பிசைந்த எல்லா மாவையும் புளிப்பாக்கி விடும். இது அனுதின வாழ்வில் நாம் பார்க்கின்ற காரியம். துர்க்குணம் இன்று உள்ளத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் தீய காரியங்கள். துர்க்குணம் உடையவர்கள் தன்னயம் நிறைந்து வாழ்பவர்கள். அவர்களின் தீய செயலினால் மற்றவர்கள் வேதனையடைவார்கள். தவறான காரியங்களைச் செய்ய மற்றவர்களுக்கு ஆலோசனைத் தருவார்கள். அத்துடன் பொல்லாப்பு செய்கிற செயலை நிறைவாக பார்க்கலாம். மற்றவர்களுக்கு பொல்லாப்பு செய்ய வேண்டாம்  என்று வேதம் போதித்திருக்கிறது. ஆனால் எப்படி அவர்களைத் துக்கப்படுத்தலாம் என்ற தன்மை அவர்களுக்கு மிகுதியான இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நடுவே சண்டை வருவதற்கு இதுவே காரணமாயிருக்கும். இவ்விதமான பழைய பாவ பண்புகளை நாம் விட்டு விலகி அந்தக் காரியங்களுக்கு இடம் கொடாது இருக்க வேண்டும். இதுவே பழைய புளித்த மாவாகும்.

4. பழைய பகை

"நீ பழைய பகையை வைத்துஇஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்எசேக்கியேல் 35:5

இன்று அநேகருடைய உள்ளத்தில் பழைய பகையினால் ஒருவருக்கொருவர் பேசாது பலவிதமான பழிவாங்கும் எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே ஆலயத்தில் கர்த்தாதி கர்த்தரை வழி படுகிறவர்களின் உள்ளத்தில் உள்ள பகை பலவிதமான பழி வாங்கும் செயலுடன் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதினால் சபையின் காரியத்திலும் இவர்கள் ஒன்று சொன்னால், அவர்கள் வேறு ஒன்று சொல்லுவதைப் பார்க்கிறோம். பழிவாங்குதல் கர்த்தருடையது. பழைய பகையினால் இன்று கசப்புகள் குடும்பத்திலும் உண்டு. என் வாழ்வில் எனக்கும் என் தாய்க்கும் நடுவாக அநேக கருத்து வேறுபாடுகள் உண்டானதால், அவசியமான சில காரியங்களையே பேசுகிற வழக்கமாக மாறிவிட்டது. ஆனால் என்று கர்த்தருக்குள் வாழ என்னைத் தம் ஆவியினால் நிறைத்து அன்பினால் நிறைத்தாரோ, அன்றே என் தாயிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டு, சமாதான வாழ்வைச் சுதந்தரித்துக் கொண்டேன். இன்று பழைய பகையினால் பலவிதமான கொலை செய்கிற நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். என்னை அதிகமாக கண்டிக்கிறார்களே என்று பகையை வளர்த்து கொள்ளுகிறவர்கள் அதிகம். இதினால் கொடூரக் காரியங்களைக் செய்கிறார்கள். கொலையும் செய்கிறார்கள். அண்மையில் அதிகமாக கண்டிக்கிற தலைமை தேவ ஊழியரைப் பகைத்து, அவரை ஆலயத்திலே கொன்ற செய்திகள் நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. பழைய பகையினால் மனைவியைத் துன்புறுத்துகிற கணவன்மார்களைக் குறித்து நாம் கேட்கிற செய்திகள் உண்டு. அன்பு சகோரனே, சகோரியே, பழைய பகை ஒருவேளை உன் குடும்பத்தாரிடமே இருக்கலாம். இந்த பழைய பகை நம் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுத்து நாசமாக்கிவிடும். யூதாஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தது அவனுக்குள் நுழைந்தபிசாசின் செயலினால் தான். பலவிதமான பகையை உள்ளத்தில் வைத்து வாழ்கிற யாவரும் மாறுதல் அடைய கிறிஸ்துவுக்க