"...நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்."

                                                                                                                                                     ஆதியாகமம் 28:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஊழியத்தின் பாதையில் ஒரு குடும்பத்துடன் தங்கியிருந்தேன். இரண்டு ஆண்பிள்ளைகள். தாயார் பிரசித்திப் பெற்ற ஒரு Hr. Sec. School ன் Principal. தகப்பனார் தின செய்தி தாளின் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்தார். அத்துடன் அந்த ஊரின் C.S.I. திருமண்டல செயலாளராகவும் பணியாற்றி கொண்டு இருந்தார்கள். அவருடைய இளைய மகன் ஆர்கன் வாசித்து, பயிற்சி செய்து கொண்டு இருந்தான். பழைய பாமாலை பாடி பயிற்சி செய்த அவனைக் கர்த்தர் நேசித்தார். அவன் மருத்துவராவான். வெளி தேசத்தில் சென்று மருத்துவப் படிப்பை படிப்பான் என்று கூறினார். அதை அவனை அழைத்துக் கூறினேன். குடும்பத்தார் யாவருக்கும் மகிழ்ச்சியுண்டானது. 12ம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தான். ஆனால் முயற்சித்த எந்த மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. சரி என்று B.A. ஆங்கிலம் (Literature) படிக்க ஒரு கல்லூரியில் சேர்ந்தான்.

                   அந்த வீட்டில் யாவரும் வெளியே சென்று விடுவார்கள். ஒவ்வொரு நாளும் கடைசியாக அந்த வீட்டின் தலைவர் தன் பணிக்குச் செல்வார். சில தினங்களாக ஒரு மருத்துவக் கல்லூரி தலைவர் தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலாதிருந்தது. கடைசியாக ஒரு நாள் வீட்டின் தலைவர் வீட்டைப் பூட்டி, வேலைக்குச் செல்ல ஆயத்தமான போது, தொலைபேசி மணி அடித்தது. உடனே வீட்டைத் திறந்து தொலைபேசியில் பேசினார். அது ஒரு மருத்துவக் கல்லூரியில் இருந்து வந்தது. உடனே வந்து Fees கட்டுங்கள் என்று சொன்னதின் பேரில் மருத்துவக் கல்லூரி படிப்பைப் படிக்க ஆரம்பித்தான். அங்கு படித்து முடித்து மேல் படிப்பை C.M.Cல் படிக்க கர்த்தர் சொன்னபடியே செய்தார். மேலும் F.R.C.S படிப்பை படிக்க இங்கிலாந்து தேசத்துக்குச் சென்று படிக்க கிருபை புரிந்தார்.

                   அன்பு சகோதரனே/ சகோதரியே கர்த்தர் உனக்குச் சொன்னதை நிச்சயமாய் நிறைவேற்றுவார். அவர் உன்னை கைவிட மாட்டார். தடைகள் வரலாம். தாமதங்கள் நேரிடலாம். கைவிடாத அன்பின் தேவன் தான் சொன்னபடியே உன்னை மேலாக்குவார். உனக்குச் சொன்னதை கட்டாயம் நிறைவேற்றுவார். விசுவாசி, தேவ மகிமையைக் காண்பாய்.

                    கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                     சகோ. C. எபினேசர் பால்.