"... அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்." சங்கீதம் 127:3

  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                     இந்த உலகத்திலே சமாதானத்தை இழந்து இரவிலே நலமாய் நித்திரை பண்ண முடியாதபடி தவிக்கிற மக்கள் ஏராளம். இரவில் தூங்குவதற்கு மருத்துவரீதியாக பெரும் மாத்திரைகளை உண்டு பழகினவர்கள் ஏராளம் உண்டு. அவர்களால் மாத்திரை இல்லாதபடி ஒரு போதும் தூங்க இயலாது.

                      ஒரு முறை ஒரு சகோதரி தன் கணவரோடு வேறொரு ஊருக்கு ஊழியம் செய்யச் சென்றார்கள். இவ்விதமாய் சென்றவர்கள் தாங்கள் சாப்பிடுகிற எல்லா மருந்துகளையும் சரி பார்த்து எடுத்துக்கொண்டார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்க மறந்துவிட்டார்கள். ஏற்கனவே பரிசோதித்த டாக்டர் இரவில் நலமாய் தூங்குவதற்கு மாத்திரைகளை எழுதியிருந்தார். அவ்விதமாய் எழுதப்பட்ட அதே டாக்டரின் prescription -ஷனை பார்த்த குடும்ப டாக்டர். அந்த தூக்க மாத்திரையின் அளவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்த மாத்திரை உங்களை அடிமைப் படுத்திவிடும். இந்த மாத்திரையின்றி ஒருபோதும் தூங்க முடியாதபடி போய்விடும். ஆகவே அந்த மாத்திரையின் அளவை பாதியாக குறைத்தார். தன் கணவரோடு ஊழியத்திற்குச் சென்ற சகோதரி, இந்த மாத்திரையை வெகு குறைவாக எடுத்து வந்துவிட்டார்கள். மருந்து கடையிலே டாக்டரின் prescription -ஷன் இல்லாததினால் மாத்திரையை தர மாட்டேன் என்று கூறிவிட்டார்கள். ஆகவே அந்த சகோதரி கையில் இருந்த மாத்திரையின் அளவைப் பாதியாக குறைத்து, தன் தூக்கம் கெடாதபடி காக்க முயற்சித்தார்கள். இப்படியாக சாப்பிட்டும் கடைசி நாட்களுக்கு தூக்க மாத்திரை இல்லாமல் போய்விட்டது. அதைக்குறித்து கவலைப்படாத அந்த சகோதரி, எப்பொழுதும் போல ஜெபித்து தன் படுக்கைக்குச் சென்றாள். மனிதனுக்கு அயர்ந்த நித்திரையை தருகிற தேவன். தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை தருகிற தேவன், அந்த மகளின் நித்திரை கெட்டுப்போகாமல் எப்பொழுதும் போல தூங்கக் கிருபைச் செய்தார். அன்று முதல் அந்தச் சகோதரி தூக்க மாத்திரை சாப்பிடுவதை அறவே விட்டுவிட்டார்கள்.

                       அன்பு சகோதரனே/சகோதரியே, இரவில் தூங்க முடியாதபடி வேதனையோடு வாழ்கிறாயா? எனக்கு ஏன் இந்தப் பாடுகள்? இந்த உலகில் எளியவர் சுகமாய், சமாதானமாய்,சாலையிலும், வீதிகளிலும், பல பொது இடங்களிலும் நலமாய்த் தூங்குகிறார்கள். ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை என்று ஏங்குகிற தேவப்பிள்ளையே, இன்று முதல் கர்த்தருக்குப் பிரியமானவைகளைச் செய்ய கற்றுக்கொள் . அவர் உன்னை அதிசயமாய் நடத்துவார். ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரச் செய்த தேவன். உனக்கும் அயர்ந்த நித்திரை வரப்பண்ணி ஆசீர்வதிப்பார்.

                                                                                           கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.