''----உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதேபோனதென்ன?

                                                                                                        எண்ணாகமம் 11:11

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

        கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.     

        ஒருபகுதியில் ஊழியம் செய்யும்போது, ஒரு ஏழைக் குடும்பத்தார் மிகுதியான துக்கத்துடன் என்னை ஜெபிக்க அழைத்தார்கள். அந்த வீட்டின் தலைவரின் கண் முழுவதும் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டிருந்தது.ஏன் எங்களுக்கு இந்த கஷ்டம் என்று ஒரு கேள்வியை கேட்டார்கள். நான் ஜெபித்த பொழுது ஒரு கண்படம் தெரிந்தது. கண்படம் என்ன என்று கேட்டேன்? அவரின் மனைவி கூறினார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னாள் என் கணவருக்கு கண்களில் ''பூ” தோன்றியது. நீங்கள் இந்த இடத்தில் கண்படம் வரைந்து வையுங்கள் எல்லாம் சுகமாகிவிடும் என்றார்கள். கண்ணை உண்டாக்கினவரை விட்டு விட்டு தவறான இடத்தில் தவறான காரியத்தைச் செய்தபடியால், இன்று  சுகம் தருவது போல் தந்து கண்ணையே பறித்து விட்டான் என்றேன் .

       தவறான ஆலோசனையினால் கண்களை இழந்தார்கள். நமக்கு ஆலோசனை கர்த்தராக இருக்கிறார். அவரையே நம்பிரச்சனையின் தீர்வுக்காக கேட்போம். கானாவூரில் திருமண வீட்டில் உண்டான குறையை தம் ஆலோசனையினால் நிவிர்த்தியாக்கின கர்த்தாதி கர்த்தர் மாறாதவர். அவரையே நம் குறைகளில்  ஆலோசனை கேட்போம். என்றும் பாதுகாக்கப்படுவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக                               

 சகோ. C. எபனேசர் பால்.