ஜெபம்

              அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவே, இதுவரை என் வாழ்க்கையிலே நான் ஜெபித்த எல்லாக் காரியங்களிலும் நலமானத்தைச் செய்தீர். அதற்காக ஸ்தோத்தரிக்கிறேன். நீர் ஜெபத்தைக் கேட்கிற தேவன். நீர் எனக்கு இரங்கி என்னை ஆசீர்வதியும். நான் வேலையில்லாத காரணத்தினால் உள்ளத்தில் சோர்வடைந்து கலங்குகிறேன். என் பெற்றோருக்கு, என் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறேன். வேலையில்லாத காரணத்தினால் என் குடும்பத்தின் தேவைகளைச் சந்திக்க முடியவில்லை. பிள்ளைகள் கேட்கிற சின்ன காரியங்களையும், என்னால் வாங்கித் தர இயலாதிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, இந்த நிலைமை மாற இன்று எனக்கு உதவி செய்யும். நல்ல வேலை கிடைத்தது என்று சந்தோஷமாய் சேர்ந்தேன். அந்த வேலையை தோடர்ந்து செய்ய முடியாது போயிற்று. சில நேரங்களில் எனக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் 2 அல்லது 3 மாதங்களிலே விட்டு விடுகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். நிரந்தரமாய் நான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தாரும். வேலையில்லாத காரணத்தினால் என் உள்ளத்தில் சோர்வடைகிறேன். வேலையில்லாத காரணத்தினால் நேரத்தை இனி வீணாய் செலவழியாதபடி ஏதாவது கடைகளிலாவது, தொழிலாவது செய்யலாமா என்ற எண்ணம் வருகிறது. நீர் ஒருவரே இந்தக்காரியத்தில் என்னை நலமாய் நடத்தக்கூடியவர். என் வயதும் அதிகமாவதால் நான் செல்லுகிற இன்டர்வியுவில் எல்லாம் வயதினால் வேலை தர யோசிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். எனக்கு வேலை இல்லை என்பதால் என் உற்றாரும், சுற்றத்தாரும் அற்பமாக தவறாக எண்ணுகிறார்கள். இயேசு கிறிஸ்துவே, என்ன ஆசீர்வதியும். என்னால் செய்யக் கூடிய வேலையை எனக்குத்தாரும். கர்த்தாவே எனக்கு வேலையில்லாதபடியினால் என் மனைவி/கணவர் என்னைத் துக்கப் படுத்தின காரியங்கள் உண்டு. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிற தேவனே, என் இந்த விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து ஒரு வேலையைத் தாரும். சில சமயங்களிலே ஹோட்டல்களிலே ஏதாவது சிறிய வேலையைச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது. நான் உமக்குப் பிரியமாய் நடந்து நல்ல வேலையைச் சீக்கிரமாய் பெற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே, எனக்கு இரங்கும், என்னை ஆசீர்வதியும். என் ஜெபம் கேளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.