செய்தி

                                       "...பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு..."

                                                                                                                             லூக்கா 8:50

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன்.

                இன்று மனிதன் வாழ்வில் பலவிதமான பயத்தினாலும், பாடுகளினாலும், நிறைந்து கலங்குகிறான். கலங்குகிற நம்மைப் பார்த்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறது என்னவென்றால் பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. பயமானது வேதனையுள்ள ஒரு செயலாயிருக்கிறது. பல காரியங்களை எண்ணி மனிதன் பயப்படுகிறான். எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறவர்கள் உண்டு. வேலை ஸ்தலத்தில் உள்ள பிரச்சினைகளினால்  பயப்படுகிறவர்கள் உண்டு. பிள்ளைகளின் திருமணம், படிப்பு, பாதுகாவல், பயணம் இவைப் போன்ற காரியங்களில், ஐயோ, என்ன ஆகுமோ என்று எண்ணிக் கலங்குகிறவர்கள் உண்டு.

எதினால் நாம் பயப்படுகிறோமோ அந்தக் காரியங்களில் பிரச்சனை அப்படியே நமக்குள் தோன்றிவிடுகிறது. நம்மை அது துக்கப்படுத்துகிறது. யோபு 3:25-ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது " என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் பயமானது நம்மிடம் உள்ள விசுவாசத்தை உரிந்து விடுகிறது. அற்ப விசுவாசியாக மாற்றிவிடுவதுடன், கர்த்தரின் வாக்கு, வல்லமை இவைகளைக் குறித்து சந்தேகத்தை உண்டாக்கிவிடுகிறது. நாம் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வார்த்தையின்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனை நோக்கிக் கேட்கும் போது, சந்தேகம், நம் ஜெபத்தின் ஆசிர்வாதத்தை பறித்துவிடுகிறது. கேட்கிற எவனும் பெற்றுக் கொள்ளுகிறான் என்ற வாக்கு ஒன்றுமில்லாததாக மாறிவிடுகிறது.

                  இயேசு கிறிஸ்துவிடம், ஒரு ஜெப ஆலயத்தலைவன் வந்தான். தன் மகளின் நோய் நீங்கி சுகமடைய வேண்டும் என்ற ஆவலுடன் இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையின் நிச்சயத்தினால் வந்தான். இயேசு கிறிஸ்து, அந்த ஜெப ஆலயத் தலைவனின் அழைப்பை ஏற்று, போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டு இருந்தார்கள். தாமதித்துக் கொண்டு இருந்த நேரத்தில், ஜெப ஆலயத்தலைவன் வீட்டில் இருந்து ஒருவன் வந்து, உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். இயேசு கிறிஸ்து இதைக் கேட்டவுடனே அந்த ஜெப ஆலயத்தலைவனை  திடப்படுத்தவும், ஒரே மகள்  இறந்து விட்டாளே என்று கலங்காதபடி  தேற்றும்படியாக, பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு என்றார்.

              இன்று அநேகர் "கடவுள் இல்லை " என்று நம்பியும், எண்ணியும், சொல்லியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய ஞானத்திற்கும் அறிவுக்கும் எட்டாத விதத்தில் அவருடைய சொற்கள், செய்கைகள் இருப்பதால், இவ்விதமாய் எண்ணுகிறார்கள். சங்  14:1-ல்  தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். இதனால் அவர்கள் கர்த்தரின் மேன்மையான நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் இழந்துக் கொண்டு இருக்கிறார்கள். "விசுவாசமில்லாமல் தேவனிடத்தில் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப்  பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்."  என்று எபி 11:6 -ல்  பார்க்கிறோம்.அவரைத் தேடும்போது நன்மையை அருளுகிறார். ஆசீர்வாதங்களை அருளுகிறார். காரியங்களை வாய்க்கச் செய்கிறார் என்ற நிச்சயம் நமக்குள் உருவாகவேண்டும். இவ்விதமாய் சில நன்மைகளை விரும்பித் தேடி கிடையாதபடியால் இவைகள் சும்மா என்றும், ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களின் வாழ்வில் கர்த்தர் நல்லவர் என்று  ருசித்துப் பாராதபடியால் தவறாக பறை சாற்றி விடுகிறார்கள். கர்த்தர் தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், புனிதனுக்கு  புனிதராகவும், மாறுபடுகிறவனுக்கு, மாறுபடுகிறவராகவும் தோன்றுகிறவர் என்று அறியாதபடியால் தேவன் இல்லை என்று சொல்லியும், எண்ணியும் திரிகிறார்கள்.

          இன்று பவிதமான உலக காரியங்களில் நம்பிக்கையில் உறுதியாயிருந்து ஏமாற்றமும், தோல்வியும், துக்கமும் அடைகிறோம்.பயணம் ஒன்றை மேற்கொள்ள பஸ் நிலையத்திற்கு சென்றவுடன் நாம் செல்ல வேண்டிய ஊரின் பெயர் உள்ளாக எழுதிய பலகையை பார்த்தவுடன் அந்த bus -ல் இது  நம்ம ஊர் செல்லும் என்று நிச்சயித்து  அதில் ஏறிவிடுகிறோம். "விசுவாசமானது நம்பப்படுகிறவர்களின்  உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருக்கிறது" என்று எபி 11:1-ல் பார்க்கிறோம். இதைப் போல இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிக்க வந்தவர் என்றும், சர்வத்தையும்  படைத்தவர் என்றும் , மரித்தும், பிழைத்தும்,இன்று நம் மத்தியில் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கை  நமக்குள் பெருகும்போது விசுவாசம் இன்னதென்று அறியமுடிகிறது.

    1. எதன் மீது நம் விசுவாசம் இருக்க வேண்டும்?

   1. நாமத்தின்மேல்.

   "... அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்."   யோவான் 2:23

                                                                        இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல்  விசுவாசம் இருக்க வேண்டும். யோவான் 1:12-ல் "அவர் நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களை தேவனுடைய பிள்ளைகளாக ஏற்று அதிகாரம் கொடுத்தார்." இன்று உலகத்தார் பெயர் ராசி என்று பார்ப்பது உண்டு. சில பெயர்களை நாம் வைத்துக் கொண்டால் சிறப்பாய், செழிப்பாய், வாழுவோம்  என்று பெயர்களின் மீது  நம்பிக்கை வைக்கிறார்கள். 'கர்த்தரின் நாமம் பலத்த துருகம்." என்று நீதி 18:10-ல் பார்க்கிறோம். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். என்று மாற்கு 16:17-ல் பார்க்கிறோம். யோவான் 16:24-ல்  "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை;  கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் " என்றுப் பார்க்கிறோம். ஆகவே இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசம் வைப்போம்.

2.  இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.

"...அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர்  என்று அறிந்து விசுவாசிக்கிறோம்..."  யோவான் 4:42

      இன்று நம்முடைய நம்பிக்கை உலக மனிதர்கள்  மீது  உள்ளது. சில மனிதர்கள் தங்கள் குடும்பத்தில் மரித்துப் போனவர்கள் இன்று தெய்வமாக இருக்கிறார்கள் என்று கூறி, அவர்கள் படத்தை வைத்து பல காரியங்களைச் செய்து வணங்கி வழிபடுகிறார்கள். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராக இருக்கிறார். இவரை நாம் நம்பும் பொது, நாம் நிறைவான நன்மைகளினாலும் ஆசீர்வாதங்களினாலும் நிறைந்து விடுவோம்.

3. சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.

"...சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். " மாற்கு 1:15

             இந்த உலகின் பாவங்களிலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை மீட்க வந்தார். நமக்காக சிலுவையிலே பாடுபட்டு மரித்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுகிறார். மீண்டும் வருவார் என்ற செய்தியை விசுவாசிக்க வேண்டும். இது இன்று உலக முழுவதும் பறைசாற்றப்பட்டு வருகிறது. இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். இன்று நாம் விசுவாசிப்போம், ஆசீர்வாதம் அடைவோம்.

II. விசுவாசத்தினால் வரும் ஆசீர்வாதங்கள்.

            நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது  பலவிதமான ஆசீர்வாதங்கள் உண்டாகிறது. மத்தேயு -9:2-ல் நமது விசுவாசத்தை காண்கிற தேவன். நம்முடைய விசுவாசத்தின் அளவு அதிகமாக இருக்கும்போது அதற்குரிய ஆசீர்வாதத்தை அருளுகிறார். மத்தேயு-21:21-ல்  "...நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும்..." என்று இயேசு கிறிஸ்து சொல்லவதைப் பார்க்கிறோம். யோவான்- 11:40-ல் இயேசு கிறிஸ்து மார்த்தாளைப் பார்த்து, " நீ விசுவாசத்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் " என்று மரித்த சகோதரனின் கல்லறைக்கு முன்பு சொன்னதைப் பார்க்கிறோம். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தபடியால், நீதிமானாக மாறினான் என்று ஆதியாகமம் 15:6-ல் பார்க்கிறோம். I யோவான் -5:4-ல் நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று பார்க்க முடிகிறது. இந்த விசுவாசத்தை நாம் நிறைவாய் பெற்று வாழும்போது கர்த்தர் எண்ணி முடியாத அதிசயங்களை செய்கிறவராக இருக்கிறார்.

1. விசுவாசத்தினால் விடுதலை உண்டாகிறது.

"...தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்." மத்தேயு - 15:22.

"இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்." மத்தேயு 15:28.

           இன்று நம் வாழ்வில் நமக்கு எதிராக பிசாசானவன் போராடிக்கொண்டே இருக்கிறான். இந்தப் பிசாசின் செயலினால் பிள்ளைகள் நன்றாய் படிக்கமுடியவில்லை, சிலர் வாழ்வில் போராடுகிற கனநித்திரையின் ஆவியினால் எப்போதும் தூங்கிக்கிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் வாழ்வில் வேசித்தன ஆவி அவர்களை வழித்தப்பி திரியப்பண்ணுகிறதைப் பார்க்கிறோம்.இப்படி பிசாசானவன் மிகுதியாக போராடிக்கொண்டே இருக்கிறான்.

                  ஒருமுறை ஒரு ஆசிரியர் குடும்பத்தார் எங்களுடைய மகன் நன்றாகப்படிகிறவன், ஆனால் இப்பொழுது திடீரென்று படிக்க முடியவில்லை என்று கூறினார்கள். தேர்வு எழுதச்சென்றால் மயக்கம் வருகிறது என்று சோர்ந்து போய்விடுகிறான். ஆனால் மிகுதியாக பெற்றோர் கலங்கினார்கள்.வகுப்பில் முதலாவதாக வந்த அவன் இப்பொது தேர்வு எழுதுவதே மிகுந்த பிரச்சனையாக இருக்கிறது என்றார்கள். அவனுக்கு விரோதமாக போராடின ஆவிகள் முற்றும் நீங்கித் தேர்வு எழுதினான். வெற்றிப் பெற்று இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து ஒரு நல்ல இன்ஜினியராக மாறினான். விசுவாசத்தினால் அக்குடும்பத்தாரில் விடுதலை உண்டானது.

2. விசுவாசத்தினால் சேதமின்றி  நாம் வாழ முடியும்.

"...அவன் தன தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை."     தானியேல் 6:23.

           தானியேல் யூத ராஜ்யத்தைச் சேர்ந்தவன். அவன் நேபுகாத் நேச்சர் என்ற பாபிலோனிய ராஜாவால் சிறைபிடிக்கப்பட்டு, ராஜாவின் அரமனையிலே சேவை செய்ய கொண்டு வரப்பட்டவன். இவ்விதமாய் கொண்டு வரப்பட்ட அத்தனை வாலிபருக்கும் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக் கொடுக்கவும், ராஜாவின் போஜனத்தில் மூன்று வருஷம் வளர்க்கப்படவும் பிரதானிகளின் தலைவனுக்கு கட்டளை கொடுத்திருந்தான். இவ்விதமாக கொண்டுவரப்பட்ட வாலிபர்களில் தானியேலை ஞானத்துக்கும், புத்திக்கும் அடுத்து     எந்த விஷயத்தில் ராஜா கேட்டாரோ, அதில் 10 மடங்கு சமர்த்தனாகக் கண்டான்.

               இவ்விதமாக இருந்த தானியேலை பிரதானிகளுக்கு மேலாக உயர்த்தி வைக்க ராஜா விரும்பினார். ஆனால் மற்ற பிரதானிகள் இந்த தானியேலின் மேல் குற்றஞ் சாட்டி  அவனைப் பகைத்தார்கள். தேவனைப் பற்றும் விஷயத்தில் தானியேலைக் குற்றப்படுத்த தந்திரமாக காரியத்தை செய்தார்கள். ராஜா காரியங்களை அறியாது அந்தத் தந்திரமான காரியத்தில் சிக்கினதுடன், தான் தீர்மானித்த காரியத்திற்கு மாறாக செய்யப்படும் நபரை சிங்கக்  கெபியிலே போடவும் வேண்டும் என்று பத்திரத்தில் கையெழுத்து போட்டிருந்தான். தானியேலைக் குற்றப்படுத்தினவர்கள் அவனை ராஜாவிடம் கொண்டு வந்து, நீர் கையெழுத்திட்ட தாக்கீதுக்கு மாறாக இவன் தன் தேவனைத் தேடினான் என்று குற்றப்படுத்திச் சிங்கக்  கெபியிலே  போட்டார்கள் .

மறுநாள் காலையில் ராஜா சிங்கக்கெபிக்கு  வந்து, தானியேலை கூப்பிட்டான். நீ  இடைவிடாது ஆராதிக்கிற உன் தேவன் உன்னை தப்புவிக்க வல்லவராக இருந்தாரா என்று கூப்பிட்டார். அப்பொழுது தானியேல், சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதப்படி, தம்முடைய தூதனை அனுப்பி அவைகளின் வாயைக் கட்டிப் போட்டார் என்று கூறி, சாட்சியாக நின்றான். ராஜ கெபியில் இருந்த அவனைத் தூக்கிவிடச் சொன்னான். அவன் தன் தேவன் பேரில் விசுவாசித்தபடியால் அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை .

               இன்று நம் வாழ்வில் சிங்கம் போல் சத்துரு எதிராக வரலாம், சேதமின்றி  காக்கும் கர்த்தர் மீது நாம் விசுவாசம் வைக்கும் போது, எந்த பிரச்னையுமின்றி காத்துக்கொள்வார். இதை நாம் விசுவாசிப்போமாக.

3. விசுவாசத்தினால் வேதனை நீங்கிய சுக வாழ்வைப் பெறுவோம்.

"...அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்." மாற்கு 5:34

               இன்று அநேகவிதமான கொடூரமான நோய்கள் நம்முடைய வாழ்வினை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இவ்விதமான நோய் வருவதால் நாம் எந்த வேலையும் செய்ய முடியாது. நம்மிடத்தில்  உள்ள பணத்தைச் செலவிட வேண்டிய நிர்பந்த நிலை உருவாகி விடுகிறது. இவ்விதமான வியாதிகளினால் தொடர் சிகிச்சை செய்ய வேண்டியதாகி  விடுகிறது.

               வேதத்தில்  பெரும்பாடுள்ள வியாதியுடன் 12 ஆண்டுகள் பாடுபட்ட ஒரு சகோதரி, தனக்கு உண்டானவைகளையெல்லாம்  செலவழித்தும் சற்றும் குணமடையாமல் அதிக வருத்தத்துடன் இருந்தாள். இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு அவர் வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று விசுவாசித்தாள். இயேசுவுக்கு பின் வந்து தான்செய்த தீர்மானத்தின்படியே இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தொட்டாள், அற்புத சுகம் பெற்றாள். இயேசு கிறிஸ்து, என் வஸ்திரத்தை தொட்டது யார் என்று மிகுதியான கூட்டத்தின்  மத்தியில் கேட்டார். அற்புதத்தைப் பெற்ற சகோதரி, இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து சம்பவித்ததையெல்லாம் சொன்னாள். இயேசு கிறிஸ்து அந்த மகளின் விசுவாசத்தைப் புரிந்து வேதனை நீங்கி சுகமாயிரு என்று கூறி அனுப்பினார்.

          ஒரு சகோதரர் ஒரு முறை தன் கையின் பெலவீனத்தினால், தான் நன்றாய் செய்து கொண்டிருந்த இசை வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார். ஆலயத்திலும், இன்னும் பல இடங்களில் "concerts " நடத்தி வந்த அந்தச் சகோதரர் தன்னிடம் இருந்த இசைக்கருவிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்றுக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஊழியரிடம், தன் பிரச்சனையைக் கூறி ஜெபித்தார். அந்நேரமே இசை வாசிக்கும் தாலந்துடைய அந்தச் சகோதரரில் அற்புத சுகம் உண்டானது. தன் வீடு சென்று தன்னிடம் இருந்த organ  வைத்து இரவு முழுவதும் மிகுந்த சந்தோஷத்துடன் பல பாடல்களை வாசித்தார். அடுத்த தினம் அந்த ஊழியரைப் பார்த்து என்னில் இருந்த சிறிய விசுவாசம் எனக்கு சுகம் கிடைக்கச் செய்தது என்று சாட்சியிட்டார்.

                  இந்த வார்த்தைகளை வாசிக்கும் தேவப்பிள்ளையே, இன்று உங்கள் விசுவாசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் இருக்கும் என்றால், அவர் உங்கள் வாழ்வில் சுகமருளி ஆசீர்வதிப்பார். "அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்..." என்ற மத்தேயு 8:17-ன்  படி நமக்குள் சுகமருளுவார். கண்ணீரோடே, கலக்கத்தோடு கவலையுடன், வேதனையுடன் வாழும் சகோதரனே,  சகோதரியே, இன்று நமக்காக தன் ஜீவனை சிலுவையில் கொடுத்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை நம்பி வா, அற்புத சுகம் பெறுவாய்.

4. விசுவாசமுள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெறுபவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

"விசுவாசமுள்ளவனாகி  ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்..." மாற்கு 16:16

            இன்று இரட்சிப்பு என்பது நம் வாழ்வில் மேலான ஆசீர்வாதமான மகிழ்ச்சிக்குரிய ஒரு நிலை.  இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைவிசுவாசிக்கும் பொழுது நமக்குள் தேவனால் உண்டாகும் மேன்மைக்குரிய ஒரு காரியம். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட  பாக்கியத்துடன், அடையாளமாக ஸ்நானம் பெறுவதாகும். இரட்சிக்கப்பட்டவர்கள் அனுதினமும் தேவ சபையில் சேர்க்கப்படுகிறார்கள்.

           இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் செய்த சகல பாவங்களும் மன்னிக்கப்பட்ட ஒரு வாழ்வைப் பெறுகிறோம். இன்று நமக்குள் பாவமில்லை என்றால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருக்கிறோம். நாம் நம்முடைய பாவங்களை, மீறுதல்களை, அக்கிரமங்களை மறையாது இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கைச் செய்து விட்டுவிட தீர்மானம் செய்யும் போது, இந்த மகத்துவமான நிலையை அடைகிறோம். இது தேவனுடைய நீதியை நிறைவேற்றும் ஒரு செயலாக இருக்கிறது. அத்துடன் பாவம் மன்னிக்கப்பட்ட நிச்சயத்துடன் ஞானஸ்நானம் பெறுவது ஒரு நல்மனச்சாட்சியாக இருக்கிறது. அத்துடன் பழையது ஒழிந்தது எல்லாம் புதிதான வாழ்வாக இது இருக்கிறது. இந்த இரட்சிப்பின் வாழ்வில் இயேசு கிறிஸ்துவை தரித்துக்கொள்ளும் செயலாக இருக்கிறது. இன்று விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெருகிறவர்கள் இரட்சிக்கப்படுவதுடன், வீட்டாரும் இரட்சிக்கப்படுவதுடன், வீட்டாரும் இரட்சிக்கப்படும் சிலாக்கியம் அடைகிறார்கள்.

5. உம்மால் ஆகும் என்ற விசுவாசம் நம்மை சுத்தமாக்கும்.

"அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்." இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்." மத்தேயு 8:2,3

                  இன்று சமுதாயத்தில் மக்கள் அதிகமாக வெறுக்கும் ஒரு வியாதி குஷ்டரோகம். இந்த வியாதியுடையவர்கள் தங்கள் சரீரத்தின் மேன்மையான அழகை இழந்து யாருமே விரும்பாத ஒரு வாழ்வை வாழ்கின்றனர். அவர்களின் புண்களில் இருந்து வீசும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. இன்று சமூதாயத்தில் அற்பமாக எண்ணப்படும் மக்கள் இவர்கள் தான். இவைகள் எதைக் குறிக்கிறது? ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த சமுதாய வாழ்வில், குஷ்டரோகியைப் போல் அநேகர் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வெளிச் சொல்ல முடியாத பாடுகளும், பிரச்சனைகளும் நிறைந்த வாழ்வு. எல்லோராலும் ஒதுக்கப்பட்ட வாழ்வு, இன்னும் தனிமை நிறைந்த வாழ்வு. தோல்வியினால் துக்கம் நிறைந்த வாழ்வு வாழ்கிறவர்களை இது குறிப்பிடுகிறது.

                 அன்பு சகோதரனே/ சகோதரியே, இன்று உன் வாழ்வு இப்படி இருக்குமானால் இயேசு கிறிஸ்துவிடம் வர உன்னை ஒப்புக்கொடுத்து விடு. அவரால் ஆகும் என்ற நம்பிக்கையின் நிச்சயத்துடன் நீ வருவாயானால், உன்னைச்  சுத்தமாக்கி நீ இழந்த அத்தனை காரியங்களையும் சுதந்தரிக்க உனக்கு அவர் உதவிச் செய்வார். உன் வாழ்வு உள்ளும் புறம்பும் சுத்தமாகும். இன்று விசுவாசத்துடன் நீ வரும் போது  இதைப் பெறுவாய்.

III. விசுவாசம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. கேள்வியினால் விசுவாசம் உண்டாகிறது.

"ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." ரோமர் 10:17

              நாம் தேவனுடைய வார்த்தையைக் கேள்விப்பட,  பட விசுவாசம் நம் உள்ளத்தில் மிகுதியாக நிறைந்து விடும். இன்று தேவனுடைய வார்த்தையைக் கேட்க, தியானிக்க இடம் கொடுப்பது அரிதான காரியமாக இருக்கிறது. தேவ வார்த்தைகள் தேனிலும் மிக மதுரமானது என்று சங்கீதம் 19-ல் பார்க்கிறோம். நம் வாழ்வில் இந்த வார்த்தையை அனுப்பி குணமாக்கி, அழிவின் குழிகளுக்கு விலக்கி காக்கிறார் என்று சங்கீதம் 107:20 -ல் பார்க்கிறோம். இந்த வசனங்கள் வாழ்க்கையின் பாதையில் நமக்கு வெளிச்சமாக இருக்கிறது. அத்துடன் நமக்கு விரோதமாக எழும்பும் பிசாசுகளைத் தாக்குவதற்கு ஆவியின் பட்டயமாக இருக்கிறது. இந்த வேத வசனம் ஆவியும் ஜீவனும் நிறைந்து எல்லா சூழ்நிலைகளிலும் ஆற்றி, நம்மை தேற்றுவதுடன் இது ஆலோசனையாக இருக்கிறது.

                   ஒருமுறை வாலிப சகோதரியின் வாழ்வில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன வாலிபன் திடீர் என்று நான் உன்னைத் திருமணம் முடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். தாங்கமுடியாத துக்கமடைந்த சகோதரி, தற்கொலை செய்து கொள்வதற்காக ஒரு கடற்கரைக்குச் சென்றாள். சற்று பகல் வெளிச்சம் இருப்பதால் இருள் வரட்டும் என்று தன் வாழ்வின் காரியங்களை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தாள். சற்று நடப்போம் என்று நடந்த போது, ஒரு இடத்தில் "புதிய ஏற்பாட்டை " இலவசமாய்க் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அது என்ன புத்தகம் என்று ஒன்றை வாங்கி ஒரு பகுதியில் அதைத் திறந்து வாசித்தாள்.  அதில் யோவான் 14:18-ல் உள்ள வாக்கியம் அந்த மகளின் கவனத்தைக் கவர்ந்தது. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன் ." என்ற வசனம் அந்த மகளைத் தேற்றியதுடன் அவள் உள்ளத்தை மாற்றியது.கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து வீடு திரும்ப அருகில் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்த போது, நான் திருமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றவர் மீண்டும் அவளைச்  சந்தித்து நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சம்மதம் தெரிவித்ததால், அந்த மகளின் வாழ்வு மகிழ்ச்சியாய் மாறியது. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ள மகளாய்  மாறினாள்.

2. சாட்சியின் மூலம் விசுவாசம் உண்டாகிறது.

நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்." யோவான் 4:39

         இன்று அநேகரின் வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை நாம் கேட்கும்போது, நம் விசுவாசம் கர்த்தரின் மீது பெருகுகிறது. அநேகரில் தோன்றின வேதனையான காரியங்கள் இயேசு கிறிஸ்துவினால் நீங்கும்போது, சாட்சியிடுகிறார்கள். அந்தச் சாட்சி அநேகரை நீதிக்குட்படுத்துகிறது.

          நாங்கள் நடத்துகிற விடுதலை ஜெபமுகாமுக்கு ஒரு முட்டை வியாபாரி சூனியத்தினால் பாதிக்கப்பட்டு, நன்றாய் நடந்தவர் நடக்க முடியாதவராய் வேதனையடைய ஆரம்பித்தார். விடுதலை முகாமிற்கு வந்தபோது, தேவனுடைய வார்த்தைகள் அவர் உள்ளத்தில் பதிய ஆரம்பித்தது. விசுவாசம் பெற்று நடக்க ஆரம்பித்தார். ஆகவே அந்த ஊரில் இருந்த இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, விடுதலை ஜெபமுகாமிற்கு வர ஆரம்பித்தனர். சாட்சியினால் விசுவாசம் பெருகும்.

3. அற்புதத்தைப் பார்க்கும்போது விசுவாசம் பெருகும்.

"இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்." யோவான் 2:11

               இயேசு கிறிஸ்துவினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்ட  சீஷர்கள், அவர்மீது விசுவாசம் வைத்தார்கள். நன்மை செய்கிறவராய்ச் சுற்றித்திரிந்த இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார். முதலாவது அற்புதத்தினைக் கண்ட சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவினால் மாற்றும் வல்லமையைக் கண்டவர்கள் விசுவாசித்தார்கள்.

 4. விசுவாச ஆவியினால் விசுவாசம் பெருகும்.

"விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால்  பேசுகிறோம்." 2 கொரிந்தியர் 4:13. ஆவிக்குள்ளான வாழ்க்கையில் வளரும்போது, விசுவாச ஆவியினால் நிறைந்து விடுகிறோம். கர்த்தருடைய பரிசுத்த ஆவிக்குள் பலவிதமான நற்பண்புகளுள்ள ஆவிகள் உண்டு. சகரியா 12:10-ல் விண்ணப்பத்தின் ஆவியைப் பார்க்கிறோம். சங்கீதம் 51:10-ல்  நிலைவரமான ஆவியைப் பார்க்கிறோம்.  சங்கீதம் 51:12-ல் உற்சாகத்தின் ஆவியைப் பார்க்கிறோம். ஏசாயா 4:3-ல்  சுட்டெரிப்பின் ஆவியைப் பார்க்கிறோம். இன்னுமாய் ஏசாயா 11:2-ல் , ஆ??