"...நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்."  

                                                                         ஆதியாகமம் 12:2

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். இந்த உலக வாழ்வில் நாம் நன்கு சமாதானமாய், சந்தோஷமாய் வாழ வேண்டுமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நமக்குத் தேவை. இந்த ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்றால் கவலை, குறைவு, கண்ணிர் பெருகிவிடும். யார் எனக்கு உதவி செய்வார்கள் என்று குழம்பி புலம்புகிற மக்களாக வாழ்வோம்.

கர்த்தராகிய தேவன் ஆபிராமை நோக்கி, நான் காண்பிக்கிற தேசத்துக்குப் போ என்று கூறினார். அவ்வாறு போகும் போது பிள்ளையில்லாத ஆபிராமை பெரிய ஜாதியாக்குவேன் என்றார். உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்றார். அத்துடன் உன்னை ஆசீர்வதிக்கின்ற மக்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன் என்று தம் நல் வார்த்தைகளை வாக்குத்தத்தமாக கூறினார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான். இதற்கு இணங்கிச் சென்ற ஆபிராமைச் சகல காரியங்களிலும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இன்று நாமும் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்க வேண்டுமானால், ஆபிரமைப் போல நாம் பிரித்தெடுக்கப்பட வேண்டும். இன்று தேசங்களில் பற்பல விதமான சடங்காச்சாரங்கள் உண்டு. ஏன், எதற்கு என்று அறியாமல் என் தகப்பனார் ஊரில், என் தாயார் ஊரில் இப்படித்தான் செய்வார்கள் என்று சொல்லி, இந்த வழிபாடுகளுக்கு அடிமைகளாயிருக்கிறோம். சில இனத்தாரில் வீட்டுக்குள் வர வலதுகாலை எடுத்து வைக்க வேண்டும், அம்மியில் காலை வைத்துத் தான் வரவேண்டும் என்று தாங்களே ஏற்படுத்தின சடங்காச்சார, பாரம்பரிய சட்டங்களைப் பின்பற்றி வருகிறார்கள். இன்னும் தகப்பன், தாயார் குடும்பங்களில் உள்ள மாமன் மாலை, அத்தை சேலை என்ற உலகப் பிரகாரமான முறைமைகளைப் பின்பற்றுவார்கள். திருமணமான தம்பதிகள் வீட்டுக்குள் வருமுன் தெருவிலேயே நிறுத்தி பல பொருட்களைத் தட்டில் வைத்து, அவர்களைச் சுற்றிய பின் வீட்டிற்குள் வரவழைப்பார்கள். இப்படி பல காரியங்களைச் செய்வதை விட்டுவிட்டு, பிரித்தெடுக்கப்படுவதற்காக, நான் காண்பிக்கிற தேசத்துக்கு வா என்று ஆபிராமைக் கர்த்தர் அழைத்தார்.

பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றுவதால் ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபமும், வேதனையும், போராட்டமும் நிறைந்து விடுகிறது. ஒருமுறை ஆசிரிய சகோதரி, தன் கணவரை இழந்து சஞ்சலம் நிறைந்த நிலையில், ஏன் என் வாழ்வில் இத்தனை கஷ்டங்கள். என் கணவரோ குடித்து மிகுதியான வேதனையைத்தான் எனக்குத் தந்தார் என்றார்கள். கர்த்தரிடம் அதிகமாக ஜெபித்து வந்த அந்த சகோதரிக்கு ஏன் இந்த நிலை குடும்ப வாழ்வில் வந்தது என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். திருமணம் முடித்தபின் ஒரு ஆற்றில் நின்ற ஒரு சடங்காச்சார சம்பவத்தினால் போராட்டம் வந்தது என்றேன். கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையை விட்டுவிட்டு இந்த ஆற்றுத் தண்ணீரில் நின்றால் எனக்கு ஆசீர்வாதம் என்று வீணாக நம்பி, வேதனையையும், பாடுகளையும் அடைந்தார்கள். நாம் மெய்யான ஆசீர்வாதம் அடைய, இவ்வாறான நம்பிக்கை, சடங்காச்சாரங்கள், பாரம்பரிய பழக்க வழக்கங்களை விட்டு விலக வேண்டும்.

'நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' என்ற வாக்கின்படி நமக்கு நாமே ஆசீர்வாதமாய் இருப்பதுடன் மற்றவர்களுக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக இருப்போம்.

1. உன் மூலமாக உன் வேலை ஸ்தலத்தில் ஆசீர்வாதம் உண்டாகும்

"...உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இருஉன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்." ஆதியாகமம் 30:27

லாபானிடத்தில் வேலை செய்த யாக்கோபு லேயாளுக்காக, ராகேலுக்காக தன் மாமனாகிய லாபானிடத்தில் வேலை செய்தான். இந்த நாட்களில் யாக்கோபினிமித்தம் கர்த்தர் லாபானின் காரியங்களை ஆசீர்வதித்தார். இதனை அறிந்த லாபான், யாக்கோபு தன் தகப்பனார் ஊருக்குத் திரும்பிப் போகக்கூடாது என்று அவனைப் பார்த்து நீ என்னுடன் இரு என்று கேட்டான். யாக்கோபும் சம்மதித்து சில காலம் இருந்தான். யாக்கோபினால் தன் மந்தையின் ஆடுகள் பெருகினது என்று லாபான் அறிந்திருந்தான்.

அருமையான சகோதரனே, சகோதரியே, உன் நிமித்தம் நீ வேலை செய்யும் ஸ்தலத்தில் ஆசீர்வாதம் உண்டாகும். ஒருமுறை ஒரு தகப்பனார் தன் மகன்களுக்காக ஜெபிக்கக் கூறினார்கள். மூத்த மகன் கடைக்குச் சென்றால் அன்று அமோக வியாபாரம் நடைபெறும், எந்த நாளாக இருந்தாலும், மூத்தவர் கடையில் இருக்கும்போது, அதிகமாக வியாபாரம் நடைபெறும், பணத்தை எண்ணி எடுத்துவர முடியாதபடி அதைப் பையில் போட்டுக் கொண்டு வருவான். அபிஷேகம் பெற்ற மூத்த மகனின் பிரசன்னம் கடையில் ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்தது.

2. நீ தங்குகிற வீடு ஆசீர்வதிக்கப்டும்

"...எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டுகர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்"

ஆதியாகமம் 39:5

யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தைத் தன் சகோதரருடன், தகப்பனாருடன் பகிர்ந்து கொண்டபடியால், அவர்களின் உறவுகளில் கசப்பு ஏற்பட்டது. யோசேப்பைப் பகைத்தார்கள். சில சொப்பனங்கள் வரும் காலத்துக்குரியதாக இருக்கும். நமக்கு என்று சொப்பனத்தில் personal- ஆக அருளப்படுகிற செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இந்த யோசேப்பு தன் வாழ்வைக் குறித்து கர்த்தர் சொன்ன சொப்பனத்தைப் பகிர்ந்து கொண்டபடியால், கசப்பும் பகையும் உண்டானது. தகப்பனார்  சகோதரர் சுக நலன்களை விசாரித்து வர யோசேப்பை சகோதரரிடம் அனுப்பிய போது, அவனைக் கொலை செய்ய எண்ணினார்கள். பின்பு அவனை இருபது வெள்ளிக்காசுக்கு மீதியானியர் கையில் விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டு போனார்கள். அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டு போனார்கள். அந்த மீதியானியர் யோசெப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட, முன் குறிக்கப்பட்ட யோசேப்பு எகிப்தியன் வீட்டிற்கு வந்தது முதல் அந்த எகிப்தியன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டது.

அருமையான தேவப்பிள்ளையே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட யோசேப்பினால் அந்த எகிப்தியன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டது போல், உன் நிமித்தம் உன் கூடாரம், வீடு ஆசீர்வதிக்கப்படும். நீங்கள் வேலை செய்கிற இடம், தங்குகின்ற ஸ்தலம் உங்கள் நிமித்தம் ஆசீர்வாதமாக மாறிவிடும்.

3. உன் நிமித்தம் உன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்

"அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகிநான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன்பயப்படாதேநான் உன்னோடேகூட இருந்துஎன் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்துஉன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்." ஆதியாகமம் 26:24

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்ற ஆபிரகாமினிமித்தம் அவனது சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டது. அபிமெலேக்கும், அவனது ஆட்களும் ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டதைக் கண்டு பொறாமை கொண்டு, அவன் வாசமாய் இருந்த இடத்தை விட்டு அவனைத் துரத்திவிட்டார்கள். அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளை எல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள். அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி, நீ எங்களை விட்டு போய்விடு, எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். ஆகவே ஈசாக்கு அவன் பயிரிட்டு நூறு மடங்கு கர்த்தரால் ஆசீர்வாதத்தை அடைந்த இடத்தை விட்டு வேறு இடம் செல்ல வேண்டியதாயிற்று. மற்ற இடங்களில் நீர்த்துரவை வெட்டினபோது அவ்வூரார் எங்களுடையது என்று தர்க்கம் பண்ணினார்கள். ஈசாக்கு அதை விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் நீர்த்துரவை வெட்டினான். அதைக் குறித்து யாரும் வாக்குவாதம் பண்ணவில்லை. அப்பொழுது ஈசாக்கு 'நாம் தேசத்தில் பழுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.' அந்த ராத்திரியில் கர்த்தர் தரிசனமாகி, உன் தகப்பனாகிய ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்று கூறி ஈசாக்கைத் திடப்படுத்தினார். அந்த இடத்திற்கு அபிமெலேக்கும், அவன் சிநேகிதனும், சேனாதிபதியும் வந்தார்கள். கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம். உம்மோடே உடன்படிக்கை பண்ணிக் கொள்ள வந்தோம், நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.

இன்று அநேகர் தங்கள் சந்ததிக்கு இம்மைக்குரிய பல பொருட்களை, வீடு வாசலை ஆயத்தபடுத்தி தங்கள் கிரியைகளை உலகப் பிரகாரமாக செய்கிறார்கள். சொத்தை சேர்த்து வைக்கிறார்கள். அது குடும்பங்களின் ஐக்கியத்தைக் கெடுத்து விடுகிறதை அறியாது, இவ்வாறு சொத்தைச் சேர்த்து வைக்கிறார்கள். மெய்யான ஆசீர்வாதத்தை அவர்கள் சேர்த்து வைக்க அறியாதவர்களாய் இருக்கிறார்கள். பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்த ஆபிரகாம், தன் சந்ததிக்கும், சந்தானத்துக்கும் உண்மையான ஆசீர்வாதத்தைச் சேர்த்து வைத்தான். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' என்ற நீதி. 10:22ன் படி கர்த்தரின் ஆசீர்வாதம் ஈசாக்கில் நிறைவாய் இருந்தது.

கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்உன் சந்ததிக்கும் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்." ஆதியாகமம் 22:18

இன்று கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கும் செயல் நாம் கீழ்ப்படிவதாகும். கீழ்ப்படியாமையின் பாவமானது, மனிதனுடைய வாழ்வில் சாபத்தையும், வேதனையையும், பாடுகளையும் மரண சாசனத்தையும் உண்டாக்கிவிட்டது. ஆதி மனிதனின் செயலைத் தேவன் மிகவும் வெறுத்தார். கீழ்ப்படியாமையின் பாவம் அவரை நாம் அசட்டை செய்கிற காரியமாகும். கனப்படுத்த வேண்டியவரை கனவீனம் பண்ணுகிற செயல்தான் கீழ்ப்படியாமை. பிள்ளையில்லாத ஆபிரகாமைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். முதிர் (100) வயதில் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான். அந்த மகனை மோரியா தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போய், நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் கர்த்தர் தனக்குச் சொன்னபடி, ஈசாக்குடன் கர்த்தர் குறிப்பிட்ட மலைக்குப் போனான். கட்டைகளை அடுக்கி தனக்கு வாக்குத் தத்தமாகக் கொடுத்த மகன் ஈசாக்கைப் பலியிட அவனைக் கட்டி, கட்டை மீது கிடத்தினான். பலியிட தன் குமாரனை வெட்டும்படி தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது ஆபிரகாமைக் கர்த்தர் கூப்பிட்டார். பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதான் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். அத்துடன் பலியிட ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டுபிடித்து அதைத் தன் குமாரனுக்குப் பதிலாக தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்திற்கு 'யேகோவாயீரே' என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. இந்தக் கீழ்ப்படிதலின் செயலினால் கர்த்தராகிய தேவன் ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார்.

2. கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்

"கர்த்தருக்குப் பயந்துஅவர் வழிகளில் நடக்கிறவன் எவனோஅவன் பாக்கியவான்." சங்கீதம் 128:1

"உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்." சங்கீதம் 128:2

"இதோகர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்." சங்கீதம் 128:4

இன்று கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நமக்குத் தேவை. இந்த உலக வாழ்வில் சட்டத்திற்குப் பயப்படுகிற மக்கள் சிலராக இருக்கிறார்கள். 'தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்' என்று நீதி. 8:13ல் அறிய முடிகிறது. இன்று தாங்கள் செய்கிற காரியம் தீமையானது என்று தெரிந்திருந்தாலும் தங்களின் ஆதாயத்திற்காக பல காரியங்களைத் துணிகரமாகச் செய்கிற மக்கள் நிறைந்து இருக்கிறார்கள். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்கிற மக்கள் பெருகி இருக்கிறார்கள். ஒருமுறை சகோதரன் ஒருவர் பாமாயில் இறக்குமதி செய்து வியாபாரம் செய்ய விசாரித்தார். அரசாங்கத்திற்கு வரி கொடுக்க வேண்டும் என்பதால், சுத்தப்படுத்தப்படாத குருடாயிலை வாங்க வேண்டும் என்று அறிந்தார். எல்லாவற்றையும் சுத்தப்படுத்தாது 60 சதவீதம் சுத்தப்படுத்திய எண்ணெயோடு, எஞ்சிய குருடாயிலைப் சேர்த்து விற்றால் தான் லாபம் கிடைக்கும் என்றதால், அந்தத் தொழிலை செய்யவில்லை. அது ஒரு தீமையான காரியம் என்று விட்டு விட்டார். இதைப்போல உளுந்து, அரிசி, பருப்பு போன்ற பொருட்களிலும் சிறிய கல்லுகளை, மண் கட்டிகளைக் கலந்து வியாபாரம் செய்கிறார்கள். இந்தக் கலப்பட பொருட்களைச் சமைத்து சாப்பிடும் போது, பல கொடூர வியாதிகள் வருகிறதை நாம் அறிய முடிகிறது.

கர்த்தருக்குப் பயப்படும் பயம் இருக்குமானால், ஆதாயத்திற்காக இவ்வாறு செய்கிற காரியங்களை நாம் வெறுத்து விடுவோம். பயத்துடன் நாம் வாழும் போது, நம்முடைய கையின் பிரயாசத்தை நாம் அனுபவிக்தக்கதான நன்மை மேன்மை ஆசீர்வாதம் உண்டாகி விடும்.

3. உண்மையானவனைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்

"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்..." நீதிமொழிகள் 28:20

            இன்று உண்மையுள்ளவர்கள் சமுதாயத்தில் மிக மிக குறைந்திருக்கிறார்கள். பொய்யைக் கூறி தங்கள் மகள்/ மகன் திருமணங்களைச் செய்கிற பெற்றோர்களைப் பார்க்கிறோம்.  பொய்யைக் கூறி தங்கள் வீடு, பொருட்களை விற்கிற மக்களைப் பார்க்கிறோம். பொய்யான சான்றிதழை வைத்து வேலையில் சேருகிற மக்களைப் பார்க்கிறோம். சிலர் தங்களின் மார்க் ஷீட்டில் பொய்யான மார்க்கைப் பதித்து விடுகிறார்கள். தாய் தகப்பன் சொத்துக்களுக்காக பொய்யான கையெழுத்துப் போட்டு புதிய பத்திரங்களைத் தங்களுக்கு சாதகமாக எழுதியுள்ள மக்களைப் பார்க்கிறோம். பொய் உதடுகளை வெறுக்கும் கர்த்தர் தமது நீதியின் செயலால் அவர்களைச் சந்திக்கும் போது, அவர்களின் தவறான செயலினால் சம்பாதித்த அத்தனைப் பொருள், பணத்தை இழந்து போகிறார்கள். பொய்யும் பொய்க்குப் பிதாவுமாகிய பிசாசானவன் விழுந்ததுபோல இவர்களும் விழுந்தும், அழிந்தும் போகிறார்கள் என்று நம் சொல்லில், செயலில் உண்மையாக நம்மை அலங்கரித்துக் கொள்கிறோமோ அன்று கர்த்தர் நம்மை உயர்த்துவார்.  

            தானியேல் உண்மையுள்ளவனாயிருந்தான், கர்த்தர் அவனை எல்லா பிரதானிக்கும் மேலாக உயர்த்தினார்.  கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால் அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் என்று விளக்கமாய் விவரித்த ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைப்படி வாழ நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தான், கர்த்தர் வல்ல பெருங்காரியங்களை அவன் மூலம் செய்து இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க பயன்படுத்தினார். ஜெபிப்பதில், துதிப்பதில் நாம் உண்மையாக மாறுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

4. கர்த்தரை பிரஸ்தாபிக்கும் போது அவர் வந்து ஆசீர்வதிப்பார்

"...நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்துஎன்னை ஆசீர்வதிப்பேன்."   யாத்திராகமம் 20:24

            நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்தில் பிரஸ்தாபிக்க வேண்டும்.  'சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்க வந்தும்,  மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிஷேசத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ என்று 1 கொரி. 9:16ல் கூறியிருப்பதை அறிந்து உணர்ந்து நாம் கிறிஸ்துவின் நாமத்தை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் என்ற இயேசு கிறிஸ்துவின் மனபாரத்தை நாம் உணர்ந்து ஊழியத்தைச் செய்ய வேண்டும். 'சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு ; எல்லா நீடியசாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு,  புத்திசொல்லு' என்று  2 தீமோத்தேயு 4:2ல் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனைச் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

            " உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியான'  நிலை ஏசாயா தீர்க்கதரிசிக்கு உண்டானபோது, ' யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் ' என்று ஏசாயா 6:8 ல் பார்க்கிறோம். ஊழியத்தின் பாதையில் என் சத்தத்தைக் கேட்டு என் நாமத்தை யார் அறிவிப்பார்கள் என்ற கர்த்தரின் மன பாரத்தை நாம் உணரமுடிகிறது. 'கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களை யெல்லாம் விவரிப்பேன்’ என்று தாவீது சங்கீதம் 9:1ல் சொல்லுவதைப் பார்க்கிறோம். அறியாமையில் ஒவ்வொருநாளும் நரக ஆக்கினைக்குள்ளாகிற மக்கள் ஏராளமாயிருக்கி றார்கள். நாம் அழிந்து கொண்டிருக்கிற மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காவிடில், நியாயத் தீர்ப்புநாளில் நம் நிலைமை வேதனையாக மாறிவிடும். முடிவில்லா ஆத்துமா ஆதாயத்தின் பணியை நான் உண்மையாய்ச் செய்ய இன்று ஒப்புக்கொடுப்போமாக. அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிற எந்த ஸ்தானத்திலும், எந்த இடத்திலும் வந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

            ஒரு முறை சித்தூர் பகுதியில் ஊழியம் செய்ய கர்த்தரின் ஆவியானவர் நடத்தினார். அவர் அழைத்துச் சென்ற இடமோ சமுதாயத்தில் அற்பமாக எண்ணப்பட்டஇடம். இவர்களின் தொழில் தெருக்களை, கழிவறைகளைச் சுத்தம் செய்கிறதாக இருந்தது. இவர்கள் நடுவே இரண்டு தினம் கூட்டம் நடத்தும்படி ஆவியானவர் வழி நடத்தினார். தங்குவதற்கு சரியான இடம் இல்லை. ஒரு சகோதரர் தங்கள் குடிசையில் தங்கக் கேட்டுக்கொண்டார்.  எந்த வசதியும் இல்லாத குடிசை. படுக்கையாக சாக்கைக் கொடுத்தார்கள். அநேக நாட்கள் உபவாசமாக இருந்த படியால் பாத்ரூம் செல்லவேண்டிய நிலையில்லாதிருந்தது. முதல்நாள் கூட்டத்தைத் தெருவில் நடத்தினோம். கூட்டம் மிகுதியாக ஜெபிக்க வந்தார்கள்.  மிகுந்த ஏழைகள், படிப்பறிவு இல்லாதவர்கள். கூட்டம் காலை 2 மணிக்குத் தான்முடிந்தது.  அநேகரில் கர்த்தர் அற்புதமாக விடுதலையும், சுகமும், சமாதானமும் கொடுத்தார்.  அடுத்த தினம் அந்த இடத்தில் இருந்த சி.எஸ்.ஐ. ஆலய போதகரை அணுகி இடம் கேட்டேன். அவர்கள் ஆலயத்தைத் திறந்து தர முடியாது, முன் இடத்தைப் பயன்படுத்த அனுமதித்தார்கள்.  மின்சாரம் எடுக்க வழியில்லா திருந்தது. மைக்செட்க்காரர், எனக்கு ரூபாய்கொடுங்கள்,  நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி என்றேன். இரண்டு கொக்கி உள்ள ஒயர்களை மின்சாரக் கம்பியில் மாட்டினார். மின்சாரம் கூட்டத்திற்கு கிடைக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் மேடையில் மைக்செட்டை ஆயத்தப்படுத்தின போது, சிறு பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்கள். திடீர் என முந்நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் தடி, கம்பெல்லாம் எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். என் மகனை யாரோ அடித்து விட்டார்கள். மூச்சுப்பேச்சு இல்லை என்று சத்தமிட்டார்கள். ஒரு நெருக்கமான சூழ்நிலை. கர்த்தருடைய ஆவியானவர் என்னை நடத்தினார். இந்தப் பிள்ளையின் தாய், தகப்பன் யார் என்றேன். கண்மூடி, பேச்சு, மூச்சு இல்லாத அந்த 12 வயது சிறுவனைக் கையில் தூக்கி வந்த தகப்பனார் தாயார் முன் வந்தார்கள். கூட்டத்தை விட்டு சற்று தள்ளி அவர்களை அழைத்து கர்த்தரிடம் ஜெபித்தேன். ஜெபித்த சில நிமிடத்திலே, சுய நினைவு இழந்த மகன் கண் திறந்து பேசினான். தாய் தகப்பனுக்கு மிகுந்த சந்தோஷம். இன்னும் அவனுக்கு நான் ஜெபிக்க வேண்டும், நீங்கள் அமைதியாக நான் சொல்லும் வார்த்தைகளை, ஆலோசனையை ஏற்று மீண்டும் ஜெபிக்க வாருங்கள் என்றேன். வந்த 300 மக்கள் அந்த கூட்டத்தில் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள். கர்த்தர் அந்த இடத்தில் வந்து ஆசீர்வதித்த படியால் அநேகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராக ஏற்றுக் கொண்டார்கள்.

இன்று கீழ்ப்படிவதால், கர்த்தருக்குப் பயந்து அவர் வழிநடப்பதால் உண்மையுள்ளவராக வாழ்வதால், கர்த்தருக்கென்று கொடுப்பதினால், ஊழியம் செய்வதினால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் என்ன நன்மைகள் உண்டாகும்?

1. ஆசீர்வாதத்தினால் கடன் வாங்காத வாழ்வு உண்டாகும்

"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால்நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய்நீயோ கடன் வாங்குவதில்லைநீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய்உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை." உபாகமம் 15:6

இன்று கடன் தொல்லையினால் சமாதானமின்றி, வேதனையுடனும் கவலையுடனும் வாழுகிற மக்கள் ஏராளம். எப்படி, எப்பொழுது என் கடன் தொல்லை நீங்கும் என்று கலங்கி வாழ்பவர்களும் உண்டு. இனி ஒன்றும் செய்ய முடியாது, இருக்கும் வரை வாழ்வோம், பிறகு தற்கொலை செய்து விடலாம் என்கிற எண்ணத்தில் வாழுகிற மக்களும் உண்டு. ஆனால் இன்று கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படும் போது சகலமும் மாறிவிடும். இல்லாதவைகளை இருக்கிறது போல் அழைக்கும் தேவன் இன்று ஜீவிக்கிறார். ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்த போது ஐயாயிரம் மக்கள் சாப்பிட்டார்கள். மீதியாக 12 கூடை நிறைய எடுத்தார்கள். அதேப் போல் உன் வருவாயை ஆசீர்வதிக்கும் போது 12 மாதமும் மீத்து வைப்பாய். குறைவு, கவலை, கடன் தொல்லை நீங்கும்.

2. ஆசீர்வாதத்தினால் உன் கையின் பிரயாசம் பன்மடங்காகும்

"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான்." ஆதியாகமம் 26:12

இன்று நாம் கையிட்டுச் செய்யும் காரியத்தைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும்போது பல மடங்காக நமக்கு லாபமுண்டாகும். நஷ்டம் சேதம் முற்றிலும் நீங்கி விடும். நாம் நினைப்பதற்கு மேலான விதத்தில் சகலமும் சம்பூரணமாகிவிடும். என் வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்க அர்ப்பணித்தேன். அவரின் ஆசீர்வாதம் பெருக ஆரம்பித்தது. எனது வீட்டில் கேஸ் அடுப்பின் சிலிண்டர் கேஸ் 35, 40 நாளுக்குத் தான் வரும். கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் 65, 70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் போதுமானதாக மாறியது. கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவன், என்ன வேறு எங்கும் சிலிண்டர் வாங்குகிறீர்களா எனக் கேட்டான். கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் கையின் பிரயாசங்கள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படும்.

3. ஆசீர்வாதத்தினால் வியாதி எல்லையை விட்டு விலகும்

"உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்." யாத்திராகமம் 23:25

வீட்டில் மருத்துவச் செலவு மற்ற எல்லா செலவையும் விட அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு நாளுக்கு நாள் மருத்துவ கடைகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் கர்த்தர் நம் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பாரானால் எந்த வியாதியும் நம் எல்லையில் காணப்படாமல் காப்பார். ஐம்பது வயது நிறைந்த இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளரின் சாட்சி ஆசீர்வாதமாக இருந்தது. பகுதி நேர ஊழியம் செய்கிற அவர்கள் இதுவரை எந்த வியாதியினாலும் பாதிக்கப்படவில்லை என்று சாட்சி கூறினார்கள். கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் வியாதி நீங்கிய நல்வாழ்வு மலரும்.

4. கர்த்தரின் ஆசீர்வாதத்தினால் குடும்பம் மேன்மையடையும்

"இதோகர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்." சங்கீதம் 128:4

"உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக் கொடியைப் போல் இருப்பாள்உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்." சங்கீதம் 128:3

இன்று குடும்ப ஆசீர்வாதமானது மிக அவசியமாய் இருக்கிறது. கணவன், மனைவி பிரித்து வாழ்கிற குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிக்  கொண்டே போகிறது. சிலர் திருமணம் செய்வதற்கே யோசிக்கிறார்கள். மனைவியின் காரியங்கள் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பெரிய மாற்றம் அடைகிறது. இது ஏன் என்றால் கணவரை சார்ந்து ஜீவியாதப்படியால் இந்தப் போராட்ட நிலை உண்டாகிறது. மனைவி சம்பாதிப்பாள்  என்றால் தன் இஷ்டத்துக்கு பணத்தைச்  செலவிடுகிற வழக்கம் எங்கும் இருப்பதைப் பார்க்கிறோம். வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே பர்ஸ் இல்லாததினால் தன்  இஷ்டப்படி திட்டமிடுகிற மனைவிகளைப்  பார்க்கிறோம். சங்கீதம் 45:10 ன் படி செய்ய மனதில்லை . கணவன் சரியில்லை என்று பறை சாற்றி வேதனை உண்டாக்கி விடுகிறார்கள். கர்த்தர் ஆசீர்வதிக்கிற மகனின் வாழ்வில் மனைவியானவள் நற்பண்புகளுடன் கவரை நேசித்து, சார்ந்தே வாழ்வாள். அத்துடன் பிள்ளைகளும் ஒலிவமரக்  கன்றுகளைப்  போல பந்தியைச் சுற்றி இருப்பார்கள். இக்காலத்தில் பிள்ளைகள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதில் அதிகமாய் பிரியப்படுகிறார்கள். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் வீட்டுச் சாப்பாட்டை  மகிழ்ச்சியோடே  சாப்பிட பந்தியில் இருப்பார்கள். அவர்கள் ஒலிவ மரக்கன்றுகள் என்று கூறப்பட்டு  உள்ளது. ஒலிவமரம் என்றால், எண்ணெய் அழகு, சுகம், செல்வதைக்  கொடுக்கக்கூடியதாகும். இவ்வாறு பிள்ளைகளின் வாழ்க்கை பெற்றோருக்கு ஆசீர்வாதமாகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. எபனேசர் பால்.