கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.
ஒரு முறை குடும்பமாக இலங்கைப் பகுதியில் ஊழியம் செய்ய சென்றிருந்தோம். ஒவ்வொரு நாள் கூட்டமும் ஆசீர்வாதமாக இருந்தது. அநேகரின் கட்டுகள் அறுந்து விடுதலையானார்கள். ஒரு நாளில் கண்டியில் ஒரு மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அன்று காலை என் மகன் அப்பா எனக்கு 'மினி கேசட் ரெகார்டர்'வேண்டும் என்று கேட்டான். என்னுடைய தீர்மானம் வெளிநாடு செல்லும்போது எதையும் வாங்காதிருப்பது நல்லது என்று எண்ணம் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று எல்லாவற்றையும் கர்த்தரிடம் அர்ப்பணித்து விட்டேன். அக்கூட்டம் மதியம் வரை நடைபெற்றது. அநேகரில் இருந்த தீய ஆவிகள் வெளியேறியது.கடைசியில் ஒரு தேவ ஊழியர் வந்தார். அவர்களுக்காக நான் ஜெபித்தேன். அவருக்கு மிகுந்த சமாதானம், சந்தோஷம் என்று கூறினார். பின்னர் தன்னிடம் இருந்த 'மினி கேசட் பிளேயரை' எடுத்து என்னிடம் கொடுத்து விட்டு, கர்த்தர் உங்களுக்கு இதைக் கொடுக்கச் சொன்னார் என்று கொடுத்தார். அத்துடன் அந்த ஊழியர் இதை எனக்காக வாங்கினேன். ஆனால் கர்த்தர் உங்களிடம் கொடுக்கச் சொன்னபடியால் இதைக் கொடுத்தேன் என்றார். அந்த ஊழியரின் பெயரைக் கேட்டேன், 'ஜார்ஜ் ஜேக்கப்' என்று கூறிச் சென்று விட்டார்கள்.
தனக்கு என்று வாங்கி இருந்த புதிய கேசட் பிளேயரைக் கர்த்தர் கொடுக்கச் சொன்னார் என்ற வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கொடுத்த அந்த ஊழியருக்காக, குடும்பத்துக்காக, ஊழியங்களுக்காக ஜெபிக்க வழிநடத்தினர். பின்பு இலங்கை செல்லும் போதெல்லாம் அவருடன் இணைந்து, அவரின் சபையில் ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை புரிந்தார்.
அன்பு சகோதரனே, சகோதரியே, உன் வாழ்வில் உள்ள எல்லாக் காரியங்களையும் கர்த்தர் அறிவார். அவரின் அன்பு செயலினால் உன் விருப்பத்தையும், உன் குடும்ப மக்களின் நல் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். ஐயோ இது எனக்குத் தேவை என்று கலங்க வேண்டாம், கதறவும் வேண்டாம். 'அவர் தமக்குப் பயந்தவர் களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.' என்ற சங்கீதம் 145:19 ன் படி நலமானதை, தேவையானதை நமக்குத் தந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ. c. எபனேசர் பால்.