சிந்தி செயல்படு

                                                       "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்,

                              உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்...''

                                                                                                               ஆதியாகமம் 22:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

Public school-ல் தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஒருவர் என்னை ஜெபிக்க அழைத்தார். அவருடைய மனைவியும் அதே பள்ளிக்கூடத்தில் பணியாற்றினார்கள். அவருக்காக ஜெபித்த நேரத்தில் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பியுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வார் என்று ஆவியானவர் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பிக்கும் பள்ளிக்கூடத்தின் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நிற யூனிபார்ம் வையுங்கள் என்று கர்த்தருடைய ஆவியானவர் அவர்களுக்கு அறிவித்தார். அவரும் தனக்குச் சொந்தமாக இருக்கிற கொஞ்ச இடத்தில் பள்ளிக்கூட கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்தார். கர்த்தர் அனுகூலமான மக்களை எழுப்பினபடியால், கட்டடத்திற்கு வேண்டிய பொருட்கள் உடனடியாக கிடைத்தது. எப்பொழுது பணம் கிடைக்கிறதோ, அப்போது கொடுங்கள் என்று பொருட்கள் கொடுத்தவர்கள் கூறினபடியால், நான்கு அறைகள் கட்டடம் துவங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் Residential School-ல் அந்தப் பகுதியில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்கள் சேர்ந்தனர். அந்தப் பள்ளிக்கூடம் வரவர பெரிதாகி இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து காரியங்களைச் செய்யும் போது மிகுந்த ஆசீர்வாதமாக மாறிவிடும். ஈசாக்கு எகிப்துக்குச் செல்லாமல் கர்த்தர் சொன்ன இடத்தில் தங்கி தாபரித்தபடியால், கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அந்த தேசத்தில் அவன் விதை விதைத்த போது 100 மடங்காக விளைந்தது. அவன் வரவர விருத்தியடைந்து மகா பெரியவனானான். அதைப் போலவே கர்த்தர் தம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவர்களை அபரீதமாக ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 சகோ. C. எபனேசர் பால்.


E- STORE