அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி | கூறுகிறேன். நீர் ஜெபத்தைக் கேட்கிற தேவன் என்று அறிவோம். இதுவரை நான் கேட்ட எல்லா விண்ணப்பத்திற்கும். வேண்டுதலுக்கும் பதில் கொடுத்தீரே, அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே. கிருபையாய் ஜெபத்தைக் கேட்டு இந்த வேலையைக் கொடுத்தீர் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இன்று இந்த வேலையில் பல காரியங்கள் பிரச்சனையாகவும், போராட்டமாகவும் மாறி இருக்கிறது. காரணமில்லாத குற்றச்சாட்டுகளும், சில சமயம் சொல்ல முடியாத தவறான காரியங்களும் என் மேல் சொல்கிறார்கள். நான் செய்யாத வைகளை நீ தான் இதைச் செய்தாய் என்று சொல்லுகிற மக்கள் பெருகி இருக்கிறார்கள். கர்த்தாவே, எனக்கு இரங்கும். நான் கூப்பிட்ட நாளில் மறுஉத்தரவு கொடுத்து, என்னை ஆசீர்வதித்த தேவனே. இன்று நான் என்ன செய்கிறதென்று தெரியாது தவித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு போதும் கைவிடாத தேவனே. இந்தச் சூழ்நிலையில் எனக்கு இரங்கும். உண்மையாய் குற்றம் செய்த மனிதன் யார் என்று வெளிப்படுத்தப்பட உதவி செய்யும். கர்த்தாவே, என் வேலையை நீர் அறிவீர். என்னுடைய சம்பளத்தில் தான் என் குடும்ப வாழ்க்கை நடைபெற்று வருகிறது. கர்த்தாவே, நீர் தந்த இந்த வேலையில் பாடுகளும், பிரச்சனைகளும் இனித் தோன்றாதிருக்க உதவிசெய்யும். கடந்த கால காரியத்தினால் உண்டான பிரச்சனை தீர்ந்துபோனது என்று எனக்குள் விசுவாசிக்கிறேன். நீர் எனக்கு இரங்கி, உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, நீர் எனக்கு இரங்கி, இந்தக் காரியத்தில் ஏற்பட்டிருக்கிற நெருக்கடியில் ஒருவரும் ஒரு குற்றத்தையும் என்னில் காணமுடியாத படி உதவி செய்வீராக. சமாதான பிரபுவே, நான் மிகுந்த சமாதானத்தோடு இந்த இடத்திலேயே தொடர்ந்து பணி செய்ய எனக்கு உதவி செய்யும். என்னைக் குறித்து ஒருவரும் கசப்பு காணாதபடி அதை நீக்கிவிடும். உம்மை நம்புகிற ஒருவன் மேலும் குற்றம் சுமராது என்று சொன்னவரே, உம்முடைய வல்லமை வெளிப்பட செய்யும். தானியேலைக் குற்றம் சாட்டினவர்கள் குற்றம் சாட்டப்பட்டு தள்ளப்பட்டு போனார்களே, என் வாழ்விலும் இவ்வாறு ஒரு காரியத்தைச் செய்து நான் மிகுந்த சமாதானத்தோடு இதே இடத்திலே வேலை செய்ய உதவி செய்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்