ஜெபம்

                                                  சரீரத்தில் அடிக்கடி தோன்றி மறைகிற பெலவீனம் நீங்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, என் வாழ்க்கையிலே என் பெலவீனங்கள் எனக்குள் பெருகும்போது, என் ஜெபத்தைக் கேட்டு எனக்குள் சுகம் தந்து, காத்து வந்தீர், அடிக்கடி பெலவீனங்கள் எனக்குள் பெருகும்போதெல்லாம் நான் உம்மையே நம்பி வேண்டி, சுகம் பெற்றேன். இதுவரை என்னைத் தள்ளாமல் என் ஜெபத்தைக் கேட்டவரே, உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள எல்லாரின் பெலவீனங்களையும் ஏற்று, கல்வாரிச் சிலுவையில் நோய்களைச் சுமந்தவரே. ஒருமுறை என் சகோதரனுடைய/சகோதரியுடைய பெலவீனங்களை நீக்கி, அவர்களின் வேதனை நீங்கி சுகமாயிருக்க உதவி செய்யும். நீர் எங்களுக்குக் கிருபையாகக் கொடுத்த வாக்குத்தத்தமான வார்த்தையின்படி, வாதை எங்கள் குடும்பங்களில் அணுகாதிருக்க உதவி செய்யும். இன்று கர்த்தாவே, என்னுடைய/எங்களுடைய பாவங்களினால் வந்த நோய்களை யெல்லாம் நீர் அறிவீர். 'நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்ப டிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.' 1 பேதுரு 2:24ன் படி உம்முடைய தழும்புகளினால் குணமானீர்கள் என்ற வாக்கு என்னிலும், என் இனத்தாரிலும் நிறைவேற உதவி செய்யும், கர்த்தாவே, சில காலமாக என் கணவர் இரவில் தூங்க முடியாதபடி போராட்டத்தோடு இரவு நேரத்தை செலவிடுகிறதை நீர் அறிவீர். உம்முடைய வாக்கின்படியும், என் ஜெபத்தையும் கேட்டு அற்புத சுகமடைந்து இரவிலே நலமாய்த் தூங்க உதவி செய்யும். நீர் அப்படிச் செய்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இன்னும் கர்த்தாவே, என்னுடைய மகன்/மகளில் தோன்றி மறைகிற பெலவீனங்கள் முற்றிலும் நீங்கச் செய்யும் கர்த்தாவே. என்னுடைய ஜெபத்தைக் கேட்டு அற்புதமான விதத்தில் சுகம், பெலன் பெருக உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்லபிதாவே, ஆமென்.


E- STORE